Skip to main content

மதுரை ஆதீனம் மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

Madurai Aadeenam tamilnadu chief minister condolence

 

சுவாசக் கோளாறால் மதுரை அப்போலோவில் சிகிச்சைப் பெற்று வந்த மதுரை ஆதினம் (வயது 77) இன்று (13/08/2021) காலமானார்.

 

அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், மதுரை ஆதீனம் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சி செய்திக் கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

1500 ஆண்டுகள் பழமை மிக்க மதுரை ஆதீனத்தின் 292- வது பீடாதிபதியாக, சைவ சித்தாந்தத்தை பரப்பும் ஆன்மீகப் பணியில் அருந்தொண்டாற்றியவர். மிகச் சிறந்த பத்திரிகையாளராகவும் விளங்கிய மதுரை ஆதீனம் பல்வேறு மக்கள் சார்ந்த பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் பேரன்பிற்கு உரியவராகத் திகழ்ந்தவர். அவரது மறைவு ஆன்மீகவாதிகளுக்கும், சைவ சமயத் தொண்டிற்கும் பேரிழப்பாகும். 

 

மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு முதலமைச்சர் இரங்கல் செய்தியில் தெரிவிக்கொள்கிறேன்.  

 

சார்ந்த செய்திகள்