Skip to main content

 காளைமாட்டுஜோசியம் பலிக்கவில்லை! இந்தியாவுக்கே கடன்கொடுப்பேன்னு சொன்ன மதுரை ரமணா மெஸ் அதிபரின் பரிதாபக்கதை!

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

 


மதுரையில் பிரபலமான ஹோட்டல் ரமணாமெஸ். நான்கு கிளைகளுடன் பரபரப்பாக இயங்கி வரும் அந்த ஓட்டல் அதிபர் செந்தில் திடீரென குடும்பத்தினருடன் மாயமாகியுள்ளார். அவர் எங்கே இருக்கிறார் என்கிற விபரம் எவருக்கும் தெரியவில்லை.  பாடாய்ப்படுத்திய மாட்டுஜோசியம்தாம் இதுக்கெல்லாம் காரணம் என்று செந்தில் 450 மாடுகள் வாங்கி வளர்த்த கதையை சொல்கிறார்கள்.


 

m

 

மதுரையில் ரமணா மெஸ் துவங்கி அதை வெற்றிகரமாக நடத்தி, மக்களிடையே பெயர் பெற்றதால், நான்கு கிளைகளையும் துவங்கி நடத்தி வந்தார்.  செந்திலுக்கு ஜோசியத்தில் அதிக நம்பிக்கை.  தொழிலில் இன்னும் உச்சத்தை தொடவேண்டுமென்றால் உலகின் எல்லா திசைளிலிருந்தும் மிக விலை உயர்ந்த காளை மாடுகளை வாங்கிக்கொண்டே இருந்தால் செல்வமும், புகழும், தொழிலும் உலகம் முழுவதும் பரவ தொடங்கும் என்று ஒரு ஜோசியர் சொன்னதை நம்பி, அதன்படியே செய்தார்.    450 மாடுகள் வாங்கி பெரிய அளவில் பண்ணை வைத்து பாதுகாத்து வருகிறார். ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலில் இவரது காளைகள் மக்களை கவரும். ஆனால், போட்டியில் பங்கேற்காது.  மாடுகளுக்கு ஏதும் ஆகிவிடும் என்பதுதான் அதற்கு காரணம்.  இவரது ஓட்டலிலும் மாடுகளின் புகைப் படங்களையே பிரேம் செய்து மாட்டியுள்ளார்.  தனது வெற்றிக்கு காரணமும் மாடுகள் என்றே சொல்லிவந்துள்ளார்.   

செந்தில்

ச்

மாடுகளின் ராசியால் பெரும் செல்வந்தர் ஆகி இந்தியாவுக்கே கடன்கொடுப்பேன் என்றெல்லாம் சொல்லி வந்துள்ளார்.  ஆனால், இன்று அவர் இருக்கும் இடமே தெரியவில்லை.


செந்தில் காணாமல் போனதிலிருந்து யாரும் இதுவரை போலிஸில் புகார் கொடுக்கவில்லை.  வாட்ஸ்-அப்பில் செந்திலின் நண்பர் ஒருவர்,  ரமணாமெஸ் உரிமையாளர் கந்துவட்டி கும்பலிடம் சிக்கிருக்கிறார்.  அவரை மிரட்டி சொத்தை வாங்க குடும்பத்தோடு கடத்திருக்கிறார்களா? இல்லை அவரது குடும்பத்தையே கொன்றுவிட்டார்களா?   என்று பதிவிட்டுள்ளார்.

 

 இதன் பின்னர், ஓட்டல் தொழிலில் உச்சத்தை இருக்கும் செந்தில்குமாரிடம், கிரைணைட் கோபாலகிருஷ்ணன் என்பவர்,   தொழிலை தமிழகம் எங்கும் விரிவுபடுத்த சிறிது சிறிதாக பணம் கொடுத்து உதவுவதுபோல் ஐந்து கோடிவரை கொடுத்தபின்பு ஆட்களை வைத்து மிரட்டி அவரின் 250 மாடுகளை பிடித்து கொண்டு ஓட்டலையும் எழுதிவாங்க அவரை கடத்தி வைத்துள்ளார் என்று செய்திகள் வந்தன. 

 

 இது குறித்து நாம் கோபாலகிருஷ்னனை தொடர்பு கொள்ள வழக்கறிஞர்  அகஸ்டினிடம் பேசினோம். ’’ஓட்டலை நாங்கதான் நிர்வகித்து வருகிறோம்.   நாங்க ஏன் சார் கடத்தணும். அவர்தான் எங்களிடம் வந்தார். நான் வெளியில் அதிகமாக வட்டிக்கு பணம் வாங்கிருக்கிறேன்.

 

 என் கடனை அடைக்கவேண்டும். நீங்களும் உதவி செய்தால் நன்றாக இருக்கும்.  என்னிடம் 5 கோடியை செந்தில் வாங்கிகொண்டு ஒரு பாட்னர்சிப் டீல் 1-8-2019ல் மதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தோம். அதில் என்னவன்றால் நாங்கள் கொடுத்த பணத்தை வைத்து ரமணாமெஸ் பெயரில் வாங்கிய கடனை அடைக்கவேண்டும் என்பதுதான் டீல்.  ஆனால் என் பணத்தையும் வாங்கிகொண்டு மொத்தமாக எஸ்கேப் ஆகிவிட்டார்.  எனவே மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் பனமோசடி புகார் கொடுத்திருக்கிறோம்’’ என்கிறார்.

 

 

ஓட்டலில் வேலைபார்க்கும் நபர் நம்மிடம்,   ’’சார், என்னோட பெயரில் வங்கி கணக்கு ஓப்பன் பண்ணி 2 லட்சம் கடன் வாங்கிருக்கிறார் செந்தில்.  மேலும் இது போல் 180 பேர்கள் பெயரில் வங்கியில் தலா 2 லட்சம் வீதம் கடன் வாங்கி மோசடி செய்திருக்கிறார் ரமணாமெஸ் உரிமையாளர் செந்தில்’’ என்று பரிதாமமாக வங்கி கணக்கு புத்தகத்தை காண்பிக்கிறார்.

 

 இதுபற்றி காவல்துரை வட்டாரத்தில் விசாரித்தபோது  ”செந்தில்குமார் தரபில் யாரும் புகார் கொடுக்கவில்லை.  அவரின் பங்குதாரரான கோபலகிருஷ்ணன் மட்டுமே செந்தில் மேல் புகார் கொடுத்திருக்கிறார்.  இதுகுறித்து செந்திலின் உறவுகளிடம் விசாரித்து வருகிறோம்.  அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பட்டியல் எடுத்து வருகிறோம்.  விசாரனை போய்கொண்டு இருக்கிறது என்று முடித்துக்கொண்டார்.

 

செந்தில் குமாரின் உறவினர் நம்மிடம்,   ’’அவர் எங்களுக்கு சொந்தம்தான் சார். மதுரையில் ரமணா  மெஸ் அமைத்து தொழிலில் உச்சத்தை தொட்டபோது எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.  எப்படி இவரால் இந்தளவுக்கு வரமுடியும் என்று நினைத்தோம்.  கடைசியில் கந்துவட்டி வாங்கித்தான் எல்லாம் செய்திருக்கிறார் என்று தெரிகிறது.  
 

கோடி கணக்கில்  கடன் வாங்கியிருக்கிறார் என்று தெரியவருகிறது.  அவரால் அதை அடைக்கவே முடியவில்லை. அந்த பணத்தையெல்லாம் இந்தியா முழுவதும் சுற்றி சுற்றி விலை உயர்ந்த 450 மாடுகளாக வாங்கி குவித்திருக்கிறார்.  ஒவ்வொரு மாடும் மூன்று லட்சம் நான்கு லட்சம் இருக்கும்.   250 மாடுகளை கடன் கொடுத்தவர்கள் ஓட்டிகொண்டு போய்விட்டார்கள்.

 

 தன் ஜாதகத்தில் கடன் வாங்கிதான் தொழில் செய்யமுடியும் என்றும், மாடுகள் வாங்க வாங்க அனைத்து கடனையும் அடைத்து நாட்டுக்கே கடன் கொடுப்பேன் என்றும் சொல்வார்.  இப்போது  எல்லாம் தலைகீழா நடக்குது.  அவராக குடும்பத்தோடு தலைமறைவா? கடன் கொடுத்தவர்கள் கடத்திவிட்டார்களா? இல்லை வேறு எதுவும் நடந்திருக்கா? என்று புரியவில்லை’’ என்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தெருநாய்களுக்குக் கருத்தடை கோரி வழக்கு; நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court barrage of questions for Lawsuit for sterilization of stray dogs

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. வழக்கறிஞராக இருக்கும் பாலாஜி, மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தத் தெருநாய்கள் சாலையோரத்திலும், பொது மக்கள் கூடும் இடத்திலும் சுற்றி வருகின்றன. சாலையில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே வருவதாலும், வாகனங்களில் குறுக்கே பாய்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளன. 

மேலும், தெருநாய்கள் கடித்து பலருக்கும் ரேபிஸ் நோய் பரவி வருகிறது. எனவே, நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அவற்றின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 39,000க்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள மதுரை மாநகராட்சியில் 2 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், ‘மதுரை மாநகராட்சியில் தெருநாய்கள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில், கருத்தடை பணிகளை மேற்கொள்ள இரண்டு கால்நடை மருத்துவ பணியிடம் எப்படி போதுமானதாக இருக்கும்?. எனவே, மதுரையில் கருத்தடை பணிகளுக்கு கூடுதலாக கால்நடை மருத்துவர்களை நியமிக்கலாம்’ எனக் கூறி இது தொடர்பான வழக்கை ஜூன் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.