சுனாமி தாக்கியதின் 16- வது நினைவு தினத்தையொட்டி தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மீன்பிடி இறங்கு தளத்தில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்தூவியும், கடலில் பாலை ஊற்றியும் பொதுமக்கள், மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் அ.தி.மு.க. சார்பில், வடச் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
சுனாமியால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய மதுசூதனன்.. (படங்கள்)
Advertisment