Skip to main content

“இறுதிவரை தளராமல் இருந்தவர் மதுசூதனன்”-புகழேந்தி இரங்கல்!

Published on 06/08/2021 | Edited on 06/08/2021
Brother Madhusudhanan was the leader of that too ...

 

உடல்நலக் குறைவு காரணமாக ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் (80), நேற்று (05.08.2021) காலமானார். அவரது மறைவு அதிமுகவிற்குப் பெரும் இழப்பு என அதிமுகவினர் உட்பட அனைத்து தரப்பிலிருந்தும் இரங்கல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு ஷ்யூரிட்டி வழங்கியவரும், இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ்.ஸால் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டவருமான பெங்களூரு புகழேந்தி, அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

அதில், அவர் தெரிவித்திருப்பதாவது, “மதுசூதனன் என்கிற தலைவனின் மறைவு ஒரு பெரிய பேரிழப்பு ஆகும். அவர் அனைவரிடத்திலும் அன்போடு பழகியவர். எம்.ஜி.ஆர் வழியில் மற்றும் அம்மாவின் அரணாக அவர்களின் ஆணைக்கினங்க கழக பணிகளை செம்மையாக ஆற்றியவர். மேலும் பல நேரங்களில் அரசியல் எதிரிகளை எதிர்கொண்டவர்களுள் அண்ணன் மதுசூதனனும் ஒருவர். ஒரு நேரத்தில் பொதுக்குழுவில் அம்மா அமர்ந்திருந்த பொழுது அண்ணன் மதுசூதனன் உரையாற்றும் பொழுது ‘எங்களுக்கு பணம் வேண்டாம், பதவி வேண்டாம், பொறுப்புகள் வேண்டாம். இது போன்ற எதுவும் வேண்டாம் உங்களது புன்னகை முகம் இருந்தால் அது ஒன்றே எங்களுக்கு பெரிய சக்தியாக விளங்கும் ஆகவே மலர்ந்த முகத்தோடு, சிரித்த முகத்தோடு உங்களை எப்போதும் பார்க்க விரும்புகிறோம்’ என்று சொன்னார்கள்.

 

அப்படி இந்த கட்சியின் மீது அதிக பற்று வைத்திருந்த அண்ணன் இன்றைய தினம் நம்மைவிட்டு வெகு தூரம் சென்றுவிட்டார். அதே நேரத்தில் அவரின் கடைசி செயற்குழு கூட்டம் என்று நினைக்கிறேன், அதில் கூட கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த கட்சியில் பிளவு ஏற்பட்டுவிட கூடாது. மேலும் இந்த கட்சியை நல்லப்படியாக எடுத்து செல்லுங்கள் என்று கூறும்பொழுது கண்ணீர் விட்டார். அவரது உடல் தளர்ந்திருந்தாலும், அவரது உள்ளமும், உறுதியும், கொள்கையும், கோட்பாடும் இறுதி வரை தளரவே இல்லை. அதற்குரிய தனிபெரும் தலைவனாக விளங்கினார். அம்மாவிற்கு பின்னால் சின்னம்மாவை கட்சியின் தலைமையை ஏற்க போயஸ் கார்டனில் சென்று அழைக்கும் பொழுதும், மற்ற நேரங்களிலும் கட்சியின்  ஒற்றுமையை நினைவில் கொண்டு தொடர்ந்து அரசியல் பயணம் செய்வதிலும் அவரை போல் வேறு யாரும் இருக்க முடியாது.

 

தேர்தல் ஆணையம் கூட அவருடைய பெயரில் தான் கட்சியையும், சின்னத்தையும் உபயோகப்படுத்தி கொள்ளலாம் என்று ஆணையை வழங்கியது. அதற்கும் உரிய தலைவராக அவர் விளங்கினார். ஆகவே அன்பு அண்ணனின் மறைவு சொல்லமுடியாத துயரை ஏற்படுத்தியுள்ளது என்பதை வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நம்மோடு தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார், என்றும் வாழ்வார்” என கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.