madars iit students passed away

Advertisment

சென்னை ஐஐடியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மஹாராட்ஷ்ரா மாநிலத்தைச் சேர்ந்த கேத்தார் சவுக்லே(20) என்ற மாணவர் நேற்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூர்புரம் போலீசார், மாணவர் கேத்தார் சவுக்லே உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தரப்பில் இருந்து தெரிவித்துள்ளனர்.

சென்னை ஐஐடியில்மாணவர்கள் உயிரிழக்கும் சோகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 74 நாட்களில் மட்டும் மூன்று இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டநிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி படிக்க வரும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்டு உயிரிழப்பதை தடுக்க நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.