Skip to main content

"மாஸ் காட்டிய மார்க்கண்டேயன்...மிரண்டு போன மந்திரி...!

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

விளாத்திகுளம் இடைத் தேர்தலில் அதிமுகவில் 'சீட்' கிடைக்காததால், மாஜி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் சுயேட்சையாக போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி நேற்று (25-03-2019) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு பிற்பகல் 1-00 மணிக்கு மனுத் தாக்கல் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

 

"Maas showed Marakandeyan... a surprise minister!

 

ஆனால், காலை 9 மணி முதலே சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆதரவாளர்கள் விளாத்திகுளம் நோக்கி வரத் துவங்கி விட்டனர். இதேபோல், அதிமுக சார்பில் களம் இறங்கும் சின்னப்பனும் மனுத்தாக்கல் செய்ததால், அவரும் படை பலத்தை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால்,ஆயிரம் பேரை கூட அவரால் திரட்ட முடியவில்லை.

 

"Maas showed Marakandeyan... a surprise minister!

 

குளத்தூர், எட்டையபுரம், புதூர், நாகலாபுரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து மார்க்கண்டேயனுக்காக வந்தவர்கள், வேனில் ட்ரம்செட், கரகாட்டம், தப்பாட்டம் முழங்க விளாத்திகுளம் நகரில் வீதியுலா வந்தனர். அவர்கள் எல்லாம் சின்னப்பனுக்காக வந்த கூட்டம் என காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை, கெடுபிடியும் காட்டவில்லை. ஆனால், வந்த கூட்டம் எல்லாம் 'அம்பாள் கோசாலை' பக்கம் திரும்பிய பிறகே, சேர்ந்த கூட்டம் எல்லாம் எதிர்பார்ட்டிக்கு என்பது உளவுத்துறைக்கு உரைத்திருக்கிறது.

 

இதுஒருபுறம் இருக்க, சின்னப்பன் மனு தாக்கல் செய்யும்போது உடனிருப்பதற்காக கோவில்பட்டியில் இருந்து காரில் வந்தார் கடம்பூர் ராஜூ. படர்ந்தபுளி அருகே வந்தபோது, சாரை சாரையாக வேனில் வந்தவர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்திருக்கிறார் அவர். ஆனால், வேனில் இருந்தவர்களோ மார்க்கண்டேயன் வாழ்க என கோஷமிட்டுள்ளனர். அதன்பிறகே அவர்கள் ஆப்போசிட் பார்ட்டி என தெரிந்திருக்கிறது கடம்பூராருக்கு.

 

"Maas showed Marakandeyan... a surprise minister!

 

நேராக விளாத்திகுளம் வந்த கடம்பூர் ராஜூ, "லோடு வண்டிகளில் வருகிற யாரையும் சிட்டிக்குள்ள அனுமதிக்காதீங்கன்னு” காவல்துறைக்கு உத்தரவு போட்டுள்ளார். இதனால் விளாத்திகுளம் மேம்பாலம் அருகேயே அனைத்து வண்டிகளையும் மறிக்க, கடுமையான வாக்குவாதம் நடந்திருக்கிறது. அதன்பிறகு போலீஸாரின் தடுப்புகளையும் மீறி மார்க்கண்டேயனின் ஆதரவாளர்கள் நகருக்கு உள்ளே வந்திருக்கின்றனர்.

 

 

11-00 மணிக்கு சின்னப்பனும் மனுத்தாக்கல் செய்துவிட்டார், மந்திரியும் அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால், மார்க்கண்டேயனை நடுவழியிலேயே நிறுத்தி வைத்து கடமை உணர்ச்சியை வெளிப்படுத்தினர் போலீஸார். ஒருகட்டத்தில் வேனில் இருந்து கீழே இறங்கிய மார்க்கண்டேயன் நடந்து செல்ல ஆரம்பித்த உடனே, போலீஸாராலும் அவரை தடுக்க முடியவில்லை. மொத்தத்தில் நேற்றைய தினம் பெரும் கூட்டத்தை கூட்டி மாஸ் காட்டிவிட்டார் மார்க்கண்டேயன்.  இந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறினால், அதிமுக டெப்பாசிட் இழப்பது உறுதி.!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.