Skip to main content

"மாஸ் காட்டிய மார்க்கண்டேயன்...மிரண்டு போன மந்திரி...!

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

விளாத்திகுளம் இடைத் தேர்தலில் அதிமுகவில் 'சீட்' கிடைக்காததால், மாஜி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் சுயேட்சையாக போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி நேற்று (25-03-2019) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கு பிற்பகல் 1-00 மணிக்கு மனுத் தாக்கல் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

 

"Maas showed Marakandeyan... a surprise minister!

 

ஆனால், காலை 9 மணி முதலே சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆதரவாளர்கள் விளாத்திகுளம் நோக்கி வரத் துவங்கி விட்டனர். இதேபோல், அதிமுக சார்பில் களம் இறங்கும் சின்னப்பனும் மனுத்தாக்கல் செய்ததால், அவரும் படை பலத்தை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால்,ஆயிரம் பேரை கூட அவரால் திரட்ட முடியவில்லை.

 

"Maas showed Marakandeyan... a surprise minister!

 

குளத்தூர், எட்டையபுரம், புதூர், நாகலாபுரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து மார்க்கண்டேயனுக்காக வந்தவர்கள், வேனில் ட்ரம்செட், கரகாட்டம், தப்பாட்டம் முழங்க விளாத்திகுளம் நகரில் வீதியுலா வந்தனர். அவர்கள் எல்லாம் சின்னப்பனுக்காக வந்த கூட்டம் என காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை, கெடுபிடியும் காட்டவில்லை. ஆனால், வந்த கூட்டம் எல்லாம் 'அம்பாள் கோசாலை' பக்கம் திரும்பிய பிறகே, சேர்ந்த கூட்டம் எல்லாம் எதிர்பார்ட்டிக்கு என்பது உளவுத்துறைக்கு உரைத்திருக்கிறது.

 

இதுஒருபுறம் இருக்க, சின்னப்பன் மனு தாக்கல் செய்யும்போது உடனிருப்பதற்காக கோவில்பட்டியில் இருந்து காரில் வந்தார் கடம்பூர் ராஜூ. படர்ந்தபுளி அருகே வந்தபோது, சாரை சாரையாக வேனில் வந்தவர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்திருக்கிறார் அவர். ஆனால், வேனில் இருந்தவர்களோ மார்க்கண்டேயன் வாழ்க என கோஷமிட்டுள்ளனர். அதன்பிறகே அவர்கள் ஆப்போசிட் பார்ட்டி என தெரிந்திருக்கிறது கடம்பூராருக்கு.

 

"Maas showed Marakandeyan... a surprise minister!

 

நேராக விளாத்திகுளம் வந்த கடம்பூர் ராஜூ, "லோடு வண்டிகளில் வருகிற யாரையும் சிட்டிக்குள்ள அனுமதிக்காதீங்கன்னு” காவல்துறைக்கு உத்தரவு போட்டுள்ளார். இதனால் விளாத்திகுளம் மேம்பாலம் அருகேயே அனைத்து வண்டிகளையும் மறிக்க, கடுமையான வாக்குவாதம் நடந்திருக்கிறது. அதன்பிறகு போலீஸாரின் தடுப்புகளையும் மீறி மார்க்கண்டேயனின் ஆதரவாளர்கள் நகருக்கு உள்ளே வந்திருக்கின்றனர்.

 

 

11-00 மணிக்கு சின்னப்பனும் மனுத்தாக்கல் செய்துவிட்டார், மந்திரியும் அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால், மார்க்கண்டேயனை நடுவழியிலேயே நிறுத்தி வைத்து கடமை உணர்ச்சியை வெளிப்படுத்தினர் போலீஸார். ஒருகட்டத்தில் வேனில் இருந்து கீழே இறங்கிய மார்க்கண்டேயன் நடந்து செல்ல ஆரம்பித்த உடனே, போலீஸாராலும் அவரை தடுக்க முடியவில்லை. மொத்தத்தில் நேற்றைய தினம் பெரும் கூட்டத்தை கூட்டி மாஸ் காட்டிவிட்டார் மார்க்கண்டேயன்.  இந்த கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறினால், அதிமுக டெப்பாசிட் இழப்பது உறுதி.!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.