Skip to main content

"சிறப்பாகப் பணியாற்றுவேன்!" - விழுப்புரம் புதிய டி.ஐ,ஜி. பேட்டி!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

M. Pandian takes charge as the 29th DIG in Villupuram

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் சரக போலீஸ் டிஐஜியாக எழிலரசன் பணியமர்த்தப்பட்டார். சில மாதங்களுக்குள் திடீரென்று அவரை சென்னை பெருநகர வடக்குப் போக்குவரத்துக் கழக இணை ஆணையராக மாற்றம் செய்து அறிவிப்பு வெளியானது. அவருக்குப் பதில், அங்கு அதே பணியில் இருந்த எம்.பாண்டியன் விழுப்புரம் சரக 29வது டிஐஜி ஆக அறிவிக்கப்பட்டு, அவர் நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

 

அதன் பின்னர், அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “விழுப்புரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் தடுப்பதற்கு முழுக் கவனம் செலுத்தப்படும். மேலும் சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாமல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வழியிலும் குற்றங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ரவுடியிச செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து அவர்களை ஒடுக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துக்களைத் தடுப்பது குறித்தும் தனிக் கவனம் செலுத்தப்படும். விழுப்புரம் சரகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட இடங்களைக் கண்டறிந்து விபத்துகள் நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் குறைகளைத் தெரிவித்து அதற்குத் தீர்வு கண்டுகொள்ளலாம். மேலும், மக்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு சிறப்பாகப் பணியாற்றுவேன்” என்று கூறினார். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள டிஐ,ஜி பாண்டியன் அரக்கோணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

 

அவர், காவல் பணியில் சேர்ந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி டி.எஸ்.பி. ஆக பணி செய்துள்ளார். அதன்பின்னர் பதவி உயர்வு பெற்று திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகப் பணிபுரிந்துள்ளார். சென்னை அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் துணை ஆணையராகவும் அதன்பிறகு சென்னை பெருநகர படகுப் போக்குவரத்து இணை ஆணையராகவும் பணி செய்துள்ளார். தற்போது விழுப்புரம் சரக டிஐஜி ஆக பொறுப்பேற்றுள்ள பாண்டியனுக்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.