Advertisment

“காலம் கடந்தும் நம்மோடு வாழ்வார்..” ஓவியர் இளையராஜாவுக்கு முதல்வர் இரங்கல்..

M K Stalin condolence to Artist Ilyaraja

கரோனா தொற்றின் காரணமாக ஓவியர் இளையராஜா உயிரிழந்தார். இச்செய்தி ஓவியக் கலைஞர்கள், ஊடகத்துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் துயரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருகிறது.

Advertisment

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஓவியர் இளையராஜாவின் மரணத்திற்கு இரங்கல் செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில் "தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் இளையராஜா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

Advertisment

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்!" என்று தெரிவித்திருக்கிறார்.

mk stalin corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe