luxury bus truck incident in near thiruvallur

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே தனியார் சொகுசுப் பேருந்தும் லாரியும் போட்டிப்போட்டுக் கொண்டு சென்றதில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே உள்ள தச்சூர் பகுதியில் லாரியும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்டன. சென்னை நோக்கிச் சென்ற லாரியும் தனியார் சொகுசுப் பேருந்தும் போட்டிப் போட்டுக் கொண்டு சென்றதில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் தனியார் சொகுசுப் பேருந்தின் கிளீனர் ஸ்ரீதர், பயணிகள் தொக்கல்லா சதீஷ்குமார், தும்மலா ரோஷித் ஆகிய 3 பேர் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல்வெளியாகி உள்ளது.

Advertisment