Skip to main content

மனிதர்களை தாக்கும் கரோனா வைரஸ்... கால்நடைகளை தாக்கும் லம்பி வைரஸ்...

Published on 06/08/2020 | Edited on 06/08/2020
Pudukkottai District

 

 

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் மனிதர்களை தாக்கி அழித்து வருகிறது. மனித உயிர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உணவு கிடைக்காத நிலை உருவாகி உள்ளது, பட்டினி சாவுகள் தொடங்கியுள்ளது. மற்றொரு பக்கம் விவசாயிகளை வாழவைக்கும் கால்நடைகளை லம்பி வைரஸ் தாக்கி வருகிறது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மாடுகளை 'லம்பி வைரஸ்' தாக்கி கால்நடைகளின் உடல் முழுவதும் பெரியம்மை போன்ற பெரிய பெரிய கொப்புலங்கள் ஏற்பட்டு புண் ஏற்படுகிறது. இதனால் கால்நடைகள் வலியால் அவதிப்படுகிறது.  

 

வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு இந்த வைரஸ் தாக்குவதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த முகாம் அமைத்து இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டிய கால்நடை மருத்துவர்கள், ஒரு தடவைக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கின்றனர். பல நாட்கள் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

 

எனவே, கரோனாவைப் போன்று அதிதீவிரமாக மாடுகளைத் தாக்கி வரும் இத்தகைய வைரஸை கட்டுப்படுத்தவும், கால்நடை மருத்துவர்களின் வசூல் வேட்டையை தடுக்கவும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை பராமரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் கரோனா காலத்தில் வாழ்வதாரமாக அமைந்தது பால்மாடுகள். இப்போது அந்த பால் மாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் வேதனையாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக மகளிரணி தலைவியின் கணவர் கத்தியால் குத்தி கொலை!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
BJP woman leader husband stabbed to passed away

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜாளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரெங்கசாமி (75). இவர் தனது சொத்துகளை தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதில் இவரது மகன் சாமிக்கண்ணுவுக்கு சொத்தில் சரியான முறையில் பிரித்து தரவில்லை என்று, சாமிக்கண்ணு மகன் ராஜேஷ் (30) ஞாயிற்றுக்கிழமை தனது தாத்தா ரெங்கசாமியிடம் தகராறு செய்து அரிவாளில் வெட்டியுள்ளார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரெங்கசாமியின் மகன் வேலு இதனை தடுக்க முயன்ற போது அவருக்கும் பலமாக வெட்டு விழுந்துள்ளது. தாத்தா மற்றும் பெரியப்பா ஆகியோரை வெறித்தனமாக வெட்டிச் சாய்த்த ராஜேஷ் அங்கிருந்து சென்றுள்ளார். காயமடைந்த வேலுவின் மனைவி திருப்பதி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக மகளிரணி தலைவியாக உள்ளார்.

வெட்டுப்பட்டு பலத்த காயங்களுடன் கிடந்த ரெங்கசாமி மற்றும் வேலு ஆகிய இருவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வேலு பரிதாபமாக உயிரிழந்தார். பாஜக மாவட்ட மகளிரணி தலைவியின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராலிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

‘குடி’யால் அழிந்த குடும்பம்; தற்கொலை செய்துகொண்ட இளம் தம்பதி

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

young couple lost their life in pudukkottai young couple lost their life in pudukkottai

 

குடிப் பழக்கத்தால் குடும்ப பிரச்சனை ஏற்பட்டு, திருமணமான 14 மாதங்களிலேயே இளம் தம்பதி தூக்கில் தொங்கிய துயரச் சம்பவம் நடந்தேறியுள்ளது. மேலும் குடியால் ஒரு குடும்பமே அழிந்து போனதே என்று கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள நிம்பநேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பொற்பனையானுக்கும் கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த டிப்ளமோ நர்சிங் படித்துள்ள பிரியங்காவுக்கும் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. பொற்பனையான் சிப்காட்டில் எலக்ட்ரீசியனாகவும் பிரியங்கா ஆலங்குடியில் ஒரு துணிக்கடையிலும் தினக்கூலி வேலை செய்து வந்துள்ளனர். வேலை முடிந்து மாலை வீடு வரும்போது பொற்பனையான் மது போதையில் வருவதால் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. குழந்தையும் இல்லை.

 

இந்த நிலையில் கடந்த மாதம் பிரியங்காவின் நகைகளை எடுத்துச் சென்ற பொற்பனையான் தங்க நகைகளை விற்றுவிட்டு அதேபோன்ற கவரிங் நகைகளை வீட்டில் வைத்துள்ளது தெரிய வந்ததால், மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு தாய் வீட்டிற்குச் சென்ற பிரியங்காவை உறவினர்கள் சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த நிலையில் நேற்று மாலை வெளியில் சென்றிருந்த பொற்பனையான், வீட்டிற்கு வந்து பார்த்த போது பிரியங்கா தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொற்பனையானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கூலி வேலைக்குச் சென்றிருந்த பொற்பனையானின் தாயார் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகனும் மருமகளும் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரது உடல்களையும் இறக்கியுள்ளனர்.

 

சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சடலங்களை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று விசாரணை செய்து வருகின்றனர். திருமணமாகி 14 மாதங்களில் புதுப்பெண் தூக்கில் சடலமாகத் தொங்கிய சம்பவம் குறித்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார். குடியால் ஒரு குடும்பமே அழிந்துவிட்டதே என்று அந்த கிராமமே கதறிக் கொண்டிருக்கின்றது.