Skip to main content

வங்கி கடன்களை திருப்பிச் செலுத்துவதில் சாமானியர்கள் நேர்மையாக இருக்கிறார்கள்! முதல்வர் எடப்பாடி பெருமிதம்!!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

வங்கிக்கடன்களை முறையாக திருப்பிச் செலுத்துவதில் ஏழை எளியவர்களும், மகளிர் சுயஉதவிக்குழுவினரும் நேர்மையாக செயல்படுகிறார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதமாக கூறினார். தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் மாநில அளவிலான வங்கிக்கடன் வழங்கும் விழா, சேலத்தில் திங்கள்கிழமை (ஜூலை 22, 2019) நடந்தது. வங்கியின் நிர்வாக இயக்குநர் பத்மஜா சுந்துரு தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம வங்கி தலைவர் தனராஜ் வரவேற்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, 31406 பயனாளிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு 112 கோடி ரூபாய் கடன்களை வழங்கினார். பெரு நிறுவன சமூக பொறுப்புத்திட்டத்தின் கீழ் 10 பள்ளிகளுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் வீதம் 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

 


விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது: தமிழ்நாடு கிராம வங்கிக்கான மூலதனம் 50 சதவீதம் மத்திய அரசு மூலமும், 35 சதவீதம் தேசிய வங்கி மூலமும் வழங்கப்படுகிறது. தேசிய வங்கிகள், இந்த வங்கியை நிர்வாகம் செய்கின்றன. தமிழகம் முழுவதும் 630 கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கி, விரைவில் 1000 கிளைகளை எட்ட உள்ளது. இவ்வங்கியின் மொத்த வர்த்தகம் 23 ஆயிரம் கோடி ரூபாய். நிறுவனங்களைத் தவிர மகளிர் சுயஉதவிக்குழுக்கள், ஏழை எளியவர்களுக்கு மட்டும் அதிகளவில் கடன்களை வழங்குவதால் வாராக்கடன் மிகக்குறைவு. மற்ற வங்கிகளின் வாராக்கடன் 10 சதவீதத்திற்கு மேல் உள்ள நிலையில், தமிழ்நாடு கிராம வங்கியின் வாராக்கடன் 1.79 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது சாமானிய மக்களின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு. 

 

 Luggage is honest in repaying bank loans! Proud to be tamilnadu CM

 

 

 


அதே போல 99 சதவீத மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தி விடுகின்றன. இதனால் சுய உதவிக்குழுக்களுக்கு பிணை இல்லாமல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. முதல்வராக இருந்தால் கூட செக்யூரிட்டி இல்லாமல் வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. ஆனால் தமிழ்நாடு கிராம வங்கியில் செக்யூரிட்டி இல்லாமல் கடன் கொடுப்பது வரவேற்கத்தக்கது. கந்து வட்டியில் இருந்து ஏழைகளை மீட்கவும், மகளிர் மேம்பாட்டிற்கும் தமிழ்நாடு கிராம வங்கியின் கடன் சேவை உதவி புரிகிறது. 

 


சேலம் மாவட்டத்தில் 26215 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் 87305 குழுக்களுக்கு 2378 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், கால்நடைகளை வாங்க 3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. எனவே இதனை கிராமப்புற விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 


இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.