Skip to main content

வங்கி கடன்களை திருப்பிச் செலுத்துவதில் சாமானியர்கள் நேர்மையாக இருக்கிறார்கள்! முதல்வர் எடப்பாடி பெருமிதம்!!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

வங்கிக்கடன்களை முறையாக திருப்பிச் செலுத்துவதில் ஏழை எளியவர்களும், மகளிர் சுயஉதவிக்குழுவினரும் நேர்மையாக செயல்படுகிறார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதமாக கூறினார். தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் மாநில அளவிலான வங்கிக்கடன் வழங்கும் விழா, சேலத்தில் திங்கள்கிழமை (ஜூலை 22, 2019) நடந்தது. வங்கியின் நிர்வாக இயக்குநர் பத்மஜா சுந்துரு தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம வங்கி தலைவர் தனராஜ் வரவேற்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, 31406 பயனாளிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு 112 கோடி ரூபாய் கடன்களை வழங்கினார். பெரு நிறுவன சமூக பொறுப்புத்திட்டத்தின் கீழ் 10 பள்ளிகளுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் வீதம் 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

 


விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது: தமிழ்நாடு கிராம வங்கிக்கான மூலதனம் 50 சதவீதம் மத்திய அரசு மூலமும், 35 சதவீதம் தேசிய வங்கி மூலமும் வழங்கப்படுகிறது. தேசிய வங்கிகள், இந்த வங்கியை நிர்வாகம் செய்கின்றன. தமிழகம் முழுவதும் 630 கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கி, விரைவில் 1000 கிளைகளை எட்ட உள்ளது. இவ்வங்கியின் மொத்த வர்த்தகம் 23 ஆயிரம் கோடி ரூபாய். நிறுவனங்களைத் தவிர மகளிர் சுயஉதவிக்குழுக்கள், ஏழை எளியவர்களுக்கு மட்டும் அதிகளவில் கடன்களை வழங்குவதால் வாராக்கடன் மிகக்குறைவு. மற்ற வங்கிகளின் வாராக்கடன் 10 சதவீதத்திற்கு மேல் உள்ள நிலையில், தமிழ்நாடு கிராம வங்கியின் வாராக்கடன் 1.79 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது சாமானிய மக்களின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு. 

 

 Luggage is honest in repaying bank loans! Proud to be tamilnadu CM

 

 

 


அதே போல 99 சதவீத மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தி விடுகின்றன. இதனால் சுய உதவிக்குழுக்களுக்கு பிணை இல்லாமல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. முதல்வராக இருந்தால் கூட செக்யூரிட்டி இல்லாமல் வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. ஆனால் தமிழ்நாடு கிராம வங்கியில் செக்யூரிட்டி இல்லாமல் கடன் கொடுப்பது வரவேற்கத்தக்கது. கந்து வட்டியில் இருந்து ஏழைகளை மீட்கவும், மகளிர் மேம்பாட்டிற்கும் தமிழ்நாடு கிராம வங்கியின் கடன் சேவை உதவி புரிகிறது. 

 


சேலம் மாவட்டத்தில் 26215 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் 87305 குழுக்களுக்கு 2378 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதலாக கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், கால்நடைகளை வாங்க 3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. எனவே இதனை கிராமப்புற விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 


இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.