Skip to main content

''ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமானவன்'' தொண்டரணி நிர்வாகி நினைவஞ்சலியில் எ.வ.வேலு பேச்சு!

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றிய தலைவர் ( சேர்மனாக ) இரண்டு முறை இருந்தவர் சேஷாசலம். திமுகவை சேர்ந்த இவர் ஒருமுறை சுயேட்சையாக நின்று சேர்மனாக வெற்றி பெற்ற திமுகக்காரர். இவரது மகன் தான் 41 வயதான திருவேங்கடம். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மாவட்ட தொண்டரணி அமைப்பாளராக இருந்தார்.

 

 Loyal to Accepted Leadership - EV Velu talk on Tondarani Administrator's memoir!

 

திருவண்ணாமலை மாவட்ட தொண்டரணி அமைப்பாளராக இருந்தாலும், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாநிலம் முழுவதிலும்மிருந்து வந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் திமுக செயல்தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, குறைகள் கேட்டார், அப்போது அறிவாலயம் வந்த கட்சியினரை ஒழுங்குபடுத்தும் பணியில் தனது தொண்டரணியினரோடு சென்று ஈடுப்பட்டவர் திருவேங்கடம். அதேபோல், வேலூர், ஈரோடு, திருச்சி என எங்கு திமுக கூட்டம், மாநாடு நடைபெற்றாலும் திருவண்ணாமலை மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் திருவேங்கடத்தையும், அவரது மாவட்ட தொண்டரணியையும் அனுப்புங்கள் என கேட்கும் அளவுக்கு தொண்டர்களை, நிர்வாகிகளை ஒழுங்குப்படுத்துவதில் கில்லாடியாக இருந்தார்.

ஓராண்டுக்கு முன்பு திருவேங்கடம் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 5ந்தேதி மரணத்தை தழுவினார். அவருக்கு அஞ்சலி மற்றும் படத்திறப்பு விழா அவரது வீடு உள்ள துர்க்கை நம்மியந்தல் கிராமத்தில் செப்டம்பர் 17ந்தேதி நடைபெற்றது.

 

 Loyal to Accepted Leadership - EV Velu talk on Tondarani Administrator's memoir!

 

இதில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ, திருவேங்கடத்தின் அப்பா சேர்மன் சேஷாச்சலம், தீவிரமான திமுக பற்றாளர். அதேபோல் திருவேங்கடத்தின் மாமானார் நடேசனாரும் தீவிரமான கட்சி விசுவாசி. முன்னாள் எம்.எல்.ஏ திருவேங்கடத்தின் மீது கொண்ட மதிப்பால் தன் மகனுக்கு திருவேங்கடம் என பெயர் சூட்டும் அளவுக்கு ஏற்றுக்கொண்டவர்களுக்கு விசுவாசமானர்கள் என்றார்.

படத்திறப்பு விழா செய்தி, புகழாஞ்சலி செலுத்திய மா.செவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ, கட்சிக்காக அவன் ஆற்றிய பணிகள் என்பது மறக்க முடியாதது. அதனால்தான் அவன் இறந்த தகவல் முரசொலியில் வந்த செய்தியை பார்த்துவிட்டு பல மா.செக்கள் என்னை தொடர்பு கொண்டு தங்களது வருத்தத்தை, இரங்கலை தெரிவித்தார்கள். அந்தளவுக்கு தொண்டரணி அமைப்பாளராக இருந்துக்கொண்டு மாநிலத்தின் பல மாநாடுகள், கட்சியின் பெரிய கூட்டங்களுக்கு சென்று பணியாற்றி பெயர் எடுத்தவன்.

 

 Loyal to Accepted Leadership - EV Velu talk on Tondarani Administrator's memoir!

 

என் மகன் கம்பன் இங்கு பேசியபோது குறிப்பிட்டதுபோல் என் குடும்பத்தில் ஒருவனாக திருவேங்கடம் இருந்தான். அவனை காப்பாற்ற எவ்வளவோ முயன்றோம், ஆனால் இயற்கையிடம்மிருந்து அவனை காப்பாற்ற முடியவில்லை. அவனுக்கு ஒரு மகன், ஒரு மகள். அந்த குழந்தைகளை கட்சி ரீதியாக மட்டும்மல்ல என் தனிப்பட்ட முறையிலும் அவர்களை நான் தத்தெடுத்துக்கொள்கிறேன் என்றார்.

திருவேங்கடத்தின் நீண்ட கால நண்பர் ஒருவர் நம்மிடம் பேசும்போது, கல்லூரி மாணவர் தலைவராக இருந்தபோதே நேரடி அரசியலுக்கு வந்துவிட்டார். உணவு சாப்பிடுவதில் ஆரம்பம் முதலே கவனம் எடுத்துக்கொள்ளவில்லை, அரசியலுக்கு வந்து தொண்டரணி அமைப்பாளராக மாறியபின் டீ, காபி தான் பெரும்பாலான உணவு, நேரத்துக்கு சாப்பிடுவதில்லை. பின்னர் அல்சர் வந்தபின்பே சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ள துவங்கினார். அதன்பின் டீ, காபி போன்றவற்றை குறைத்துக்கொண்டு மாதுளை, ஆப்பிஸ் ஜீஸ் குடிக்க பழகினார். ஆனால், அவரது உடல் அதற்கு முன்பு அவர் டீ, காபிகள் பிளாஸ்டிக் கப்புகளில் குடித்தது, அவரது உடலில் தீங்கை ஏற்படுத்திவிட்டன.

அதனால் அவர் லிவர் பிரைமரி என்கிற கேன்சரால் பாதிக்கப்பட்டார். அந்த நோய் தாக்கியதை கூட நெருங்கியவர்களை தவிர மாற்றவர்களுக்கு சொல்லவில்லை, என்னன்னு தெரியல, டாக்டரை பார்த்துக்கிட்டு தான் இருக்கன்னு சொல்லிக்கிட்டு வந்தார். வேலுவும், அவரது மகன் கம்பனும்தான் மருத்துவ உதவிகள், பொருளாதார உதவிகள் செய்து பார்த்துக்கொண்டனர்.

 

Loyal to Accepted Leadership - EV Velu talk on Tondarani Administrator's memoir!

 

திருவேங்கடம் அவரது அப்பாவை போன்றே இருக்கற இடத்துக்கு விசுவாசமாதான் இருந்தார். எம்.எல்.ஏ அல்லது எம்.பியாகிடனும்'னு கனவு கண்டார், அரசியலுக்கு வருபவர்கள் பலரின் கனவுதான் அது. தனக்கு எல்லாம்மே ‘எம்பெருமான்’ தான். தன்னை எம்பெருமான் பார்த்துக்கொள்வார், எம்.பியாக்குவார், எம்.எல்.ஏவாக்குவார் என நினைத்தார். அது நடக்காமலே போய்விட்டது. எனக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் எனது குடும்பத்தை எம்பெருமான் பார்த்துக்கொள்வார் என கடைசி காலத்தில் சொல்லிவந்தார், அவரின் பதவி என்கிற கனவுதான் நிறைவேறவில்லை, குடும்பத்தை பார்த்துக்கொள்வார் என்கிற நம்பிக்கை கனவை கலைக்காமல் பார்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்றார் கண்ணீரோடு.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.