Skip to main content

குறைந்த கூலி... அதிக லாபம்... உயரப் போகும் கோழி விலை!

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

Low wages for workers ... sales at high profits ...! - Poultry prices are going up due to the struggle

 

மக்கள் இறைச்சிக்காக அதிகம் சாப்பிடும் உணவாக இருப்பது பிராய்லர் கோழிகள். இந்த கோழிகள் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள். தமிழகம் முழுவதும் 25,000 கோழிப்பண்ணைகள் உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான கோழிகள் விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில்,  தங்களுக்குக் கோழி நிறுவனங்கள் வளர்ப்புக் கூலி உரிய வகையில் வழங்கவில்லை எனக் கூறி 11 ஆம் தேதியில் இருந்து கோழி வளர்ப்பில் ஈடுபடமாட்டோம் எனக் கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன் மாநிலத் தலைவர் மூர்த்தி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நம்மிடம் கூறினார். "தமிழகத்தில் 25,000 கோழிப்பண்ணைகளில் விவசாயம் சார்ந்த தொழிலாக இதைச் செய்து வருகிறோம். பண்ணைகளில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இந்தப் பண்ணைகளுக்கு ஒவ்வொரு கோழி நிறுவனங்களும், குஞ்சு மற்றும் தீவனங்களை வழங்கி வருகிறது. அதனைப் பெற்றுக்கொண்ட பண்ணையாளர்கள் 40 முதல் 50 நாட்கள் வரை கோழிகளை வளர்த்துக் கொடுக்கின்றனர். இதற்குக் கூலியாக கிலோ ஒன்றுக்கு மூன்று முதல் ஆறு ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு அந்த நிறுவனங்கள் வழங்குகின்றன.


இந்தத் தொகை முழுமையாகப் போதவில்லை என்று பலமுறை கோரிக்கைகளை வைத்தோம். சென்ற 2010 ஆம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 4.50 விலை நிர்ணயம் செய்து ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், போடப்பட்ட ஒப்பந்தப்படி இந்தக் கோழி நிறுவனங்கள் அதை நடைமுறைப்படுத்தவில்லை. கோழி வளர்ப்புச் செலவுகள் பல மடங்கு உயர்ந்து விட்டது. இன்றளவும் கிலோ ஒன்றுக்கு ரூ 3.50 முதல் ஆறு ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறார்கள். இதனால், கோழிப்பண்ணையை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. பலமுறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அவர்கள் வரவில்லை. இப்போது, கிலோ ஒன்றுக்கு 5 வரை மட்டுமே தர முடியும் என அவர்கள் கூறிவிட்டனர்.

 

Low wages for workers ... sales at high profits ...! - Poultry prices are going up due to the struggle


நாங்கள் கேட்ட ஒரு கிலோவுக்கு 12 ரூபாயை தர முடியாது எனக் கூறிவிட்டனர். இதனால் 11ஆம் தேதி முதல் எங்கள் பண்ணைகளில் வளர்க்கும் கோழிகளை, அந்தக் கோழி நிறுவனங்களே வந்து ஆட்களை வைத்து, குஞ்சுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்து விட்டோம். எங்கள் பண்ணையில் உள்ள கோழிகளை வளர்த்துக் கொடுக்க உழைப்புக்கேற்ற ஊதியம் தான், இந்த கோழி நிறுவனங்கள் தர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என்றார்.

இவர்களின் நியாயமான போராட்டத்தால் கோழி உற்பத்தி குறையும். இதனால், கோழி நிறுவனங்கள் விலையை ஏற்றி, மக்கள் தலையில் தான் கட்டப்போகிறது. தற்போது பிராய்லர் கோழிகளின் விலை என்பது ஒரு கிலோ நூற்று ஐம்பது ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. குஞ்சு, தீவனம், வளர்ப்புக் கூலி என்று கணக்கிட்டால் முதலீடு என்பது ஐம்பது ரூபாயைத் தாண்டாது. ஆனால், இரவு, பகலாக இந்தக் கோழிகளை வளர்த்துக் கொடுக்கும் விவசாயிகளுக்கு உரிய கூலியை தராமல், அவர்களின் உழைப்பைச் சுரண்டி வருகிறார்கள். 

 

உழைப்பாளர்களுக்குக் குறைந்த கூலி, வாங்கும் நுகர்வோருக்கு அதிக லாபத்தில் விற்பனை. இது தானே முதலாளித்துவக் கோட்பாடு.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.