மழை காரணமாக வெங்காயத்தின் விலை, தொடர் ஏற்றத்தில் இருந்து வருகிறது. அதனால் தமிழக அரசு 'பண்னணபசுமை' காய்கறி கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஏற்பாடு செய்தது.
அதன் படி இன்று சென்னை தோனாம்பேட்டையில் உள்ள 'பண்ணை பசுமை' நுகர்வோர் கடையில் வெங்காயம் ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்க பொதுமக்கள் காலை 6 மணி முதலே நீண்ட வரிசையில் காத்துநின்றனர். ஆனால், போதுமான அளவு வெங்காயம் கிடைக்காததால் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.