Skip to main content

தமிழக அரசின் 'தாலிக்கு தங்கம்' திட்டத்தில் மெத்தனம்... பெற்றோர்கள் கோரிக்கை!

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

low income family women married government scheme

 

கூலித் தொழிலாளர் குடும்பப் பெண் பிள்ளைகளின் திருமணத்தின்போது, 'தாலிக்கு தங்கம்', திருமணச் செலவுக்கு 'உதவித் தொகை' வழங்கும் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இதன்படி ஏழைப் பட்டதாரி பெண்களாக இருந்தால், திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கம் அளிக்கப்படுகிறது. அதேபோல், +2 பள்ளிப் படிப்பு மட்டும் படித்த பெண்களாக இருந்தால், ஒரு பவுன் தங்கம், ரூ.24 ஆயிரம் உதவித்தொகை என சமூக நலத்துறை மூலம் தமிழக அரசு வழங்குகிறது .

 

கடலூர் மாவட்டத்தில், சுமார் 13 ஊராட்சி ஒன்றியங்களில் எஸ்.எஸ்.எல்.சி படித்த பெண்கள், பட்டதாரிப் பெண்கள், திருமண உதவி கேட்டு, அனைத்துச் சான்றுகளுடன் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர். அசல் சான்றிதழை, சம்பந்தப்பட்ட ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள சமூக நல விரிவாக்க அதிகாரிகளிடம் வழங்கியுள்ளனர். 
 

விண்ணப்பத்தைப் பெற்ற வட்டார விரிவாக்க அலுவலர்கள், நேரில் சென்று ஆய்வு செய்து, உதவிகேட்டு விண்ணப்பித்தவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து, ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களுக்கு தொடர் பதிவெண் வழங்கியுள்ளனர். இந்தப் பதிவேடுகளின் படி, திருமண உதவித் திட்டத்தில் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. 

 

2019 ஜூலை மாதத்திற்குப் பிறகு, தற்போது வரை சுமார் ஒன்றரை ஆண்டுகளாக திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பெற்றோர்கள் தினம், தினம் வட்டார விரிவாக்க அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து வருகின்றனர். கடன்பட்டு பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு தவிக்கும் பெற்றோர்களுக்கு அரசு வழங்கும் உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் பெரும் உதவியாக இருக்கும்.
 

cnc

 

அந்த உதவியை, விரைவில் தவிக்கும் பெற்றோர்களுக்குக் கிடைக்க மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் தனி கவனம் செலுத்தி, பதிவு செய்தவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க வழிசெய்ய வேண்டும் என ஏக்கத்தோடு வேண்டுகோள் விடுகின்றனர், பெண் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.