Low impact for the second day ... Today's corona situation in Tamil Nadu!

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 973 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கை 990 ஆக பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு சற்று குறைவாகும். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,15,219 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 109 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 114 என்று இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

Advertisment

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,157 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 16 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். 12 வயதிற்கும்உட்பட்ட 66 சிறார்களுக்கு இன்று ஒரேநாளில் கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 11,147 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,114 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 26,57,282 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். கோவையில்-114, ஈரோடு-71, செங்கல்பட்டு-84, தஞ்சை-40, திருவள்ளூர்-32, சேலம்-59, திருப்பூர்-65, திருச்சி-33, நாமக்கல்-45 பேருக்கு கரோனா இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Advertisment