Skip to main content

சென்னையில் குறைந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை... பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் பாதிப்பு 

Published on 06/07/2020 | Edited on 06/07/2020
Low corona prevalence in Chennai ... increasing in other districts

 

தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கரோனா  கண்டறியப்பட்டுள்ளது. 33 ஆயிரத்து 518 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 3,827 பேருக்கு கரோனா பாதிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக, 4 ஆயிரத்தை தாண்டி பதிவான நிலையில், இன்று நான்காயிரத்திற்கும் குறைவாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக  கரோனா உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் மருத்துவமனைகளில் 46,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இரண்டாயிரத்திற்கும் குறைவாக  கரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 1,747 பேருக்கு சென்னையில் மட்டும் கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 70 ஆயிரத்து 71 ஆக மொத்த பாதிப்பு உள்ளது. சென்னையில் மூன்றாவது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 61 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அரசு மருத்துவமனைகளில் 46 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 15 பேரும்  கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும்  ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இதுவரை 489 பேர்  கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தமாக 1,082 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 128 பேரும், திருவள்ளூரில் 100 பேரும் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,571 ஆக அதிகரித்துள்ளது. 37-வது நாளாக உயிரிழப்போர் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் தொடர்ந்து வருகிறது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் மட்டும் 2,080 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், மாவட்டங்களில் ஆயிரத்தை கடந்துள்ளது பாதிப்பு. அதேபோல் தேனி, தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களிலும் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. மதுரையில் மேலும் 245 பேர் கரோனா  உறுதி செய்யப்பட்டதால், அங்கு மொத்த எண்ணிக்கை 4,338 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் 213 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 152 பேருக்கும், திருவள்ளூரில் 175 பேருக்கும், கோவையில் 60 பேருக்கும், விழுப்புரத்தில் 50 பேருக்கும், சிவகங்கையில் 51 பேருக்கும்,  வேலூரில் 49 பேருக்கும்  ஒரே நாளில் கரோனா  உறுதி  செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஒரே நாளில் 109 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 1,271 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகரில் 86 பேருக்கும், நெல்லையில் 84 பேருக்கும், கன்னியாகுமரி 70 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 41 பேருக்கும், திருச்சியில் 40 பேருக்கும், சேலத்தில் 39 பேருக்கும், திருவண்ணாமலையில் 37 பேருக்கும் இன்று ஒரே நாளில் கரோனா செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமாக 66 ஆயிரத்து 571 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் இன்று ஒரேநாளில் 3,793 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.