Skip to main content

இன்று, சென்னையில் குறைந்த கரோனா பாதிப்பு!!... பிற மாவட்டங்களின் பாதிப்பு நிலவரம்!!

Published on 05/07/2020 | Edited on 06/07/2020

 

 Low corona impact in Chennai today !!

 

தமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான்காவது முறையாக கரோனா பாதிப்பு என்பது 4 ஆயிரத்தைக் கடந்து தமிழகத்தில் பதிவாகியுள்ளது. அதேபோல் சென்னையில் இன்று 1,713 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது நாளாக 2 ஆயிரத்திற்குக் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.

இதனால் தமிழகத்தில் மொத்தம் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151 என உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 68 ஆயிரத்து 254 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 43 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 17 பேரும்  கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கரோனா  பாதிப்பில் ஒரே நாளில் 21 பேர் இறந்துள்ளனர்.

வேறு நோய் பாதிப்பில்லாத 3 பேர் இன்று கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இதுவரை 456 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை 1,054 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாகச் செங்கல்பட்டில் 119 பேரும், திருவள்ளூரில் 94 பேரும், காஞ்சிபுரத்தில் 33 பேரும், மதுரையில் 62 பேரும், ராமநாதபுரத்தில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 2,186 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 62, 778 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

 Low corona impact in Chennai today !!


மதுரையில் 315 பேருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை மாவட்டத்தில்  கரோனாவிற்கு  இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 315 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4,091 ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 199 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த பாதிப்பு என்பது 4,789 ஆக அதிகரித்துள்ளது, இதனால் அங்கு மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது 5000-ஐ நெருங்கியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை என்பது 84 ஆக இருக்கிறது. 1,716 பேர் தற்பொழுது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 197 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் சென்னையை அடுத்த செங்கல்பட்டில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை செங்கல்பட்டில் மொத்தம் 6,552 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் 142 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 2,496 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை திருவண்ணாமலையில் 1,050 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 90 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை  1,067 ஆக அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 86 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை என்பது 1,068 ஆக அதிகரித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 146 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்திருக்கிறது. இதுவரை 33 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 62 பேருக்கு கரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரத்தில் மொத்தமாக இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,354 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் பரமக்குடியைச் சேர்ந்த ஒருவரும், கமுதி சேர்ந்த ஒருவரும் இறந்துள்ளனர். இதனால் ராமநாதபுரத்தில் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 66 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை என்பது அங்கு ஆயிரத்தைக் கடந்துள்ளது. மொத்தமாக இதுவரை 1,051 பேருக்கு  கரோனா இதுவரை அங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 778 பேர் சிக்கியுள்ளனர், 234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் மொத்தமாக இதுவரை அங்கு 6  பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு மொத்த பாதிப்பு என்பது 200 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 191 பேருக்கு கரோனா  பாதிப்பு உறுதியான நிலையில் இன்று மேலும் 9 பேருக்கு அங்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூரில் ஒரேநாளில் 179 பேருக்கு  கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  

 

 Low corona impact in Chennai today !!


தமிழகத்தில் சென்னையில் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வந்த நிலையில் தற்போது சென்னையை விட பிற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், சென்னையில் பாதிப்பு குறைவதாகவும் தகவல்கள் வெளியாகியது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது,


 

http://onelink.to/nknapp

 

''சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்து வருவது தற்காலிக வெற்றிதான். பிற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று சொல்வதை விட அதைத் தடுக்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் மதுரை, ராமநாதபுரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்'' என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  


இன்று மட்டும் தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,437 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


.

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.