/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tt11_0.jpg)
தமிழகத்தில் ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,905 ஆக உள்ளது. கடந்த 68 நாட்களுக்குப் பிறகு கடந்த நான்கு நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,45,585 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று மேலும் 203 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,159 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 23 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,217 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 2,047 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை 25,11,076 பேர் பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இணைநோய்கள் ஏதும் இல்லாத 7 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)