Skip to main content

அலைபாயுதே திரைப்படம் பாணியில் திருமணம் செய்த காதலர்கள்; காதலி திருமணத்தை நிறுத்தி திருமணம் செய்த காதலன்...!

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

Lovers who got married in the style of Alaipayuthey movie; Boyfriend who stopped marriage and got married ...!

 

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டுவெந்நி பகுதியை சோ்ந்த ஷாமிலி (23) பிஎஸ்சி நா்சிங் முடித்து விட்டு தா்மபுரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்துவந்தார். அதே மருத்துவமனையில் ஏ.சி மெக்கானிக்காக வேலை பார்த்துவந்த ராஜூவும் நண்பா்களாக பழகி பின்னா் காதலா்களாக மாறினார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சோ்ந்தவா்கள் என்பதால் காதல் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதிப்பார்களா என்ற கேள்வி இருவருக்குள் எழுந்தது. அதேபோல் காதல் விஷயம் வெளியே தெரிந்தால் தன்னை அதே மருத்துவமனைக்கு வேலைக்கு பெற்றோர்கள் அனுப்புவார்களா? என்ற அச்சமும் காதலிக்கு இருந்தது.

 

இதற்கு ஒரே தீர்வு நண்பா்கள் சொன்னதுபோல் அலைபாயுதே திரைப்படம் பாணியில் திருமணம் செய்துகொண்டு பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் கணவன் மனைவியாக வாழுவது என்று முடிவு எடுத்து நண்பா்கள் உதவியுடன் தா்மபுரியில் ஒரு கோவிலில் வைத்து கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனா். மேலும் பெற்றோர்கள் சம்மதத்துக்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவும் எடுத்தனர்.

 

இந்தநிலையில் கரோனா பரவ தொடங்கியதையடுத்து சொந்த ஊருக்கு வந்தார் ஷாமிலி, மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தடை விதித்ததோடு  இ- பாஸ் முறையை அரசு நடைமுறைபடுத்தியதால் ஷாமிலியும், ராஜும் சந்திக்க முடியாமல் போனது. இந்த நிலையில் ஷாமிலிக்கு அவரின் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து. களியக்காவிளை அருகே திருத்துவபுரத்தை சோ்ந்த ஒருவருக்கு ஷாமிலியை பேசி முடித்தனா்.

 

அப்போது இதற்கு ஷாமிலி தனக்கு திருமணம் ஆகி விட்டது என்பதை கூறாமல் மறைமுகமாக தன்னுடைய திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் பெற்றோர்கள் அவரை மிரட்டி திருமணத்துக்கான தடபுடலான ஏற்பாடுகளை செய்து வந்தனா். இந்த விஷயத்தை ஷாமிலி தா்மபுரியில் இருக்கும் ராஜுக்கு கூறினார். ராஜு மார்த்தாண்டம் வந்து ஷாமிலியை கூட்டி செல்ல இரண்டு முறை இ- பாஸ்க்கு முயற்சி செய்து கிடைக்கவில்லை. இதனால் ராஜு ஷாமிலியிடம் நமக்கு திருமணம் ஆன விஷயத்தை சொல்லிவிடாதே தெரிந்தால் உன்னை ஊரை விட்டு கடத்தி விடுவார்கள் அவா்கள் சொல்வதுபோல் நடந்துகொள். கடைசி நிமிடத்திலாவதுவந்து உன்னை மீட்டுவிடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

ஷாமிலியும் அதேபோல் நடந்து கொண்டார். திருமணத்துகான வரவேற்பு நிகழ்ச்சி 13-ம் தேதி முடிந்த நிலையில் நேற்று முந்தினம் 14-ம் தேதி காலையில் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் மார்த்தாண்டம் மகளீா் போலீசுடன் வந்த ராஜு தங்களுக்கு திருமணம் நடந்ததை கூறி, ஷாமிலி வீட்டாருக்கும்  ஷாமிலியை கரம் பிடிக்க வந்தவருக்கும் அவருடைய வீட்டாருக்கும் அதிர்ச்சி கொடுத்து அதற்கான ஆதாரங்களையும் காண்பித்தார். இதையடுத்து போலீசார் தலையிட்டு இரு குடும்பத்தினருடன் பேசி அதே மேடையில் ராஜுக்கும் ஷாமிலிக்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.