Skip to main content

தாயையும் மகனையும் விட்டுத் தலைமறைவான காதலன்; 3 மாதக் குழந்தையுடன் காதலி தர்ணா

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

A lover who leaves mother and son behind; Girlfriend Darna with a 3 month old baby

 

சிதம்பரத்தில் காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பள்ளிவாசலில் கைக்குழந்தையுடன் பெண்  தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அம்பலத்தாடிமடத் தெருவைச் சேர்ந்தவர் ஆஷித் என்பவரது மகன், இப்ராஹீம் அஸ்லாம் (25). ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வேலைக்காகச் சென்ற கொத்தங்குடித் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகள் மகேஸ்வரி. 22 வயதான மகேஸ்வரியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இப்ராஹீம் அஸ்லாம் தனிமையில் இருந்துள்ளார்.

 

இந்நிலையில், கர்ப்பமான மகேஸ்வரி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியபோது வீட்டில் வந்து கேட்குமாறு தெரிவித்துள்ளார். வீட்டில் சென்று கேட்ட போது இப்ராஹீம் அஸ்லாம் தந்தை ஆஷித் மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் மகேஸ்வரி 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் எனக் கூறியதின் பேரில் மகேஸ்வரி இஸ்லாமியராக மதம் மாறி அவருக்கு ஆயிஷா என்ற பெயரும் வைக்கப்பட்டது. பின்னர்  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிதம்பரம் லப்பை தெருவில் உள்ள பள்ளிவாசலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை பள்ளிவாசல் ஜமாத்தார்கள் செய்துவைத்துள்ளனர்.

 

இந்நிலையில், ஜனவரி 16ம் தேதி மகேஸ்வரி என்கிற ஆயிஷாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து ஆயிஷாவின் கணவர் இப்ராஹீம் அஸ்லாம் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனது கணவரை அவரது தந்தை மறைத்து வைத்திருப்பதாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் கணவருடன் சேர்த்து வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

 

புகாரின் பேரில் மகளிர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து கணவரிடம் சேர்த்து வைக்காததால், திருமணம் நடைபெற்ற லப்பை தெரு பள்ளிவாசல் முன்பு வெள்ளிக்கிழமை நீதி கேட்டு ஆயிஷா 3 மாத கைக்குழந்தையுடன் உறவினர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனஜா மற்றும் காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிஷா மற்றும் உறவினர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.