Skip to main content

தாயையும் மகனையும் விட்டுத் தலைமறைவான காதலன்; 3 மாதக் குழந்தையுடன் காதலி தர்ணா

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

A lover who leaves mother and son behind; Girlfriend Darna with a 3 month old baby

 

சிதம்பரத்தில் காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பள்ளிவாசலில் கைக்குழந்தையுடன் பெண்  தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அம்பலத்தாடிமடத் தெருவைச் சேர்ந்தவர் ஆஷித் என்பவரது மகன், இப்ராஹீம் அஸ்லாம் (25). ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வேலைக்காகச் சென்ற கொத்தங்குடித் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகள் மகேஸ்வரி. 22 வயதான மகேஸ்வரியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இப்ராஹீம் அஸ்லாம் தனிமையில் இருந்துள்ளார்.

 

இந்நிலையில், கர்ப்பமான மகேஸ்வரி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியபோது வீட்டில் வந்து கேட்குமாறு தெரிவித்துள்ளார். வீட்டில் சென்று கேட்ட போது இப்ராஹீம் அஸ்லாம் தந்தை ஆஷித் மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் மகேஸ்வரி 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் எனக் கூறியதின் பேரில் மகேஸ்வரி இஸ்லாமியராக மதம் மாறி அவருக்கு ஆயிஷா என்ற பெயரும் வைக்கப்பட்டது. பின்னர்  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிதம்பரம் லப்பை தெருவில் உள்ள பள்ளிவாசலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை பள்ளிவாசல் ஜமாத்தார்கள் செய்துவைத்துள்ளனர்.

 

இந்நிலையில், ஜனவரி 16ம் தேதி மகேஸ்வரி என்கிற ஆயிஷாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து ஆயிஷாவின் கணவர் இப்ராஹீம் அஸ்லாம் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனது கணவரை அவரது தந்தை மறைத்து வைத்திருப்பதாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் கணவருடன் சேர்த்து வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

 

புகாரின் பேரில் மகளிர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து கணவரிடம் சேர்த்து வைக்காததால், திருமணம் நடைபெற்ற லப்பை தெரு பள்ளிவாசல் முன்பு வெள்ளிக்கிழமை நீதி கேட்டு ஆயிஷா 3 மாத கைக்குழந்தையுடன் உறவினர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனஜா மற்றும் காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிஷா மற்றும் உறவினர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.