Skip to main content

ஒன்றாக தற்கொலை செய்துகொள்ளலாம் என நாடகமாடி காதலியை கொலைசெய்த காதலன்...ஒருமாதம் கழித்து துப்புதுலக்கிய போலீசார்!!

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

திட்டமிட்டு காதலிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கூட்டாக தற்கொலைக்கு முயன்றதாக போலி நாடகமாடிய இளைஞரை ஒரு மாதம் கழித்து திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் பத்தாம் தேதி திருவல்லிக்கேணி மியான்  சாகிப் தெருவில் உள்ள டிஎம்சி விடுதியில் காதல்ஜோடி ஒன்று அறை எடுத்துத் தங்கியது. அவர்கள் தங்கி இருந்த அறை கதவு அடுத்தநாள் வரை திறக்கப்படாமல் இருந்ததால் விடுதி ஊழியர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, இளம்பெண் கட்டிலில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவர் அருகில் இளைஞர் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதை அறிந்து போலீசாரிடம் தெரிவித்தனர்.

Lover who incident his girlfriend by trying to commit suicide


அதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த இளைஞர் சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கூட்டாக தற்கொலை செய்து கொள்ள முயன்று கடைசியில் விஷம் அருந்தியதில் காதலி மட்டும் உயிரிழந்ததாகவும் காதலன் உயிருக்குப் போராடி தவித்து வந்ததாகவும், இந்த வழக்கில் இருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்து காதலன்  எதிர்பாராத விதமாக உயிர் பிழைத்ததாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.

Lover who incident his girlfriend by trying to commit suicide


ஆனால் விசாரணையில் அந்த இளம்பெண் கொல்லப்பட்டது தெரிய வந்தது. சவுகார்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சுந்தர் சிங் மற்றும் கல்லூரி மாணவியான காஜல் ஆகிய இருவரும் 3 வருடமாக  காதலித்து வந்த நிலையில் அவரது வீட்டில் பெற்றோர்கள் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். ஒன்றாக சேர்ந்து வாழதான் முடியவில்லை ஒன்றாக இறந்து விடலாம் என இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவில் திருவல்லிக்கேணியில் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

 

Lover who incident his girlfriend by trying to commit suicide


மேலும் இருவரும் ஒரேநேரத்தில் உயிரிழக்க வேண்டும் என்பதற்காக சயனைடு விஷத்தை இணைத்தளத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். முதலில் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத சமர் சிங் காஜலின் தொடர் வற்புறுத்தலினால் தற்கொலைக்கு ஒத்துக்கொண்டான். தங்க நகை வியாபாரம் செய்வதாகவும் தங்கத்தை கரைக்க சயனைடு தேவைப்படுவதாகவும் கூறி அதை அரை கிலோ அளவுக்கு ஆர்டர் செய்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Lover who incident his girlfriend by trying to commit suicide


சயனைடு கையில் கிடைத்தவுடன் கடந்த மாதம் ஜூன் மாதம் பத்தாம் தேதி அந்த காதல் ஜோடி திருவல்லிக்கேணி விடுதியில் அறை எடுத்து நெருக்கமாக பொழுதை கழித்துவிட்டு மறுநாள் குளிர்பானத்தில் சயனைடை கலந்து குடிக்க முடிவெடுத்திருந்தனர். முதலில் காதலியான காஜல் சயனைடு கலந்த குளிர்பானத்தை குடிக்க அந்த இறுதி நேரத்தில் மனம் மாறியுள்ளான் சுமர் சிங். மனம் மாறியதும் தற்கொலை முடிவில் பின்வாங்கி அவன் சயனைடு கலந்த குளிர்பானத்தை குடிப்பது போல் பாவனை காட்டியுள்ளான். இதை கவனித்த காதலி இதுபற்றி கேட்ட பொழுது எங்கே இவள் உயிர்  பிழைத்துவிட்டால் உண்மையாகவே குளிர்பானத்தை குடித்த சொல்வாளோ  என்ற பயத்தில் துப்பட்டாவால் காஜலின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டதாக சுமார் சிங் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளான்.

Lover who incident his girlfriend by trying to commit suicide


விடுதி அறையில் சம்பவத்தன்று போலீசார் சென்று பார்த்த பொழுது சயனைட் கலந்த குளிர்பானத்தை குடித்துவிட்டு உயிருக்கு போராடுவது போல் பாவனை செய்துள்ளான் சுமர். சயனைட் பவுடரை குளிர்பானத்தில் கலந்த பொழுதும், அதை வாய் அருகே வைத்துக் குடிப்பது போல் நடித்த போதும் அந்த நெடி அவனது உடலுக்குள் சென்றதால் சிறிது மூச்சுத் திணறல் ஏற்பட்டதே தவிர அவன் விஷயத்தை அருந்த வில்லை என்பதும், காதலி தப்பித்துவிட்டால் மீண்டும் தற்கொலைக்குத் தூண்டுவாள் என்று எண்ணி காதலியை கொலை செய்து விட்டு நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமானது.

இந்த வழக்கில் காதலியை கொலை செய்ததாக சுமார் சிங்கை ஒரு மாதம் கழித்து கைது செய்த திருவல்லிக்கேணி போலீசார் அவனை புழல் சிறையில் அடைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.