Skip to main content

''மரங்களை காதலிப்போம்'' -தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு புத்தி புகட்ட அதிரடி காட்டும் தன்னார்வலர்கள்!!

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

தேனி மாவட்டத்தில் 'ஆணி பிடுங்கும் திருவிழா' என்ற பெயரில் தன்னார்வலர்கள் பலர் ஒருங்கிணைந்து கடந்த 3 மாதங்களாக சாலையோரம், குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளையும், விளம்பர பதாகைகளையும் அகற்றி வருகின்றனர். மரங்களில் ஆணி அடிப்பதால் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறுவதோடு, மரங்களுக்கும் உயிர் இருப்பதால் இந்த திருவிழா என்ற பெயரில் களப்பணி செய்வதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

"Love the trees" - Action volunteers to inspire Theni district administration !!

 

இந்த ஆணி பிடுங்கும் களப்பணியில் தொடர்ச்சியாக பல புதுமைகளை புகுத்தி வருகின்றனர். அந்த வகையில் தேனியில் 'ஆணி பிடுங்கும் போட்டி வீரபாண்டியில் 'ஆங்கிலப் புத்தாண்டு ஆனந்த களப்பணி', பாலார்பட்டியில் 'தைப்பொங்கல் தன்னார்வலர் களப்பணி' என புதிய வடிவில் சிந்தித்து ஆணிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

நேற்று காதலர் தினத்தன்று 'மரங்களை காதலிப்போம்' என்ற பெயரில் வைகை அணை பகுதியில் ஆணி பிடுங்கும் பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக மக்களை நோக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தன்னார்வலர்கள் திடீரென மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். கண்டனத்தை பதிவு செய்வது என்பது ஆர்ப்பாட்டம், போராட்டம் என்ற வடிவிலோ அல்லது சுவரொட்டிகள் வழியிலோ தெரிவிப்பது வழக்கம், ஆனால் தேனி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மரம் நடுதல் என்ற பெயரில் கண்டனத்துக்கு புதிய வடிவம் கொடுத்துள்ளனர்.

 

"Love the trees" - Action volunteers to inspire Theni district administration !!

 

இதுதொடர்பாக தேனி மாவட்ட தன்னார்வலர்கள் குழுவை சேர்ந்த சிலரிடம் கேட்டபோது,

நாங்கள் எந்த அமைப்பின் பெயரிலும் களப்பணி மேற்கொள்ளவில்லை. முழுக்க முழுக்க தன்னார்வலர்களின் களப்பணி இது. இதற்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவளித்து வலிமை மிக்க பயணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக ஆணி பிடுங்கும் திருவிழா நடத்தி வருகிறோம். இதுவரை 36 களப்பணிகள் நடத்தி உள்ளோம். சுமார் 130 கிலோ ஆணிகளை மரங்களில் இருந்து அகற்றி உள்ளோம். மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் கோம்பை அருகே தே.ரெங்கநாதபுரத்தில் நடந்த அணி பிடுங்கும் களப்பணியில் புதுமணத் தம்பதியினர் திருமணக் கோலத்தில் வந்து ஆணி பிடுங்கினர். இது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் தரப்பில் எங்களுக்கு இதுவரை எந்தவிதமான ஒத்துழைப்பும் அளிக்கப்படவில்லை. வைகை அணையில் நேற்று ஆணிகளை பிடுங்கிக் கொண்டு இருந்தபோது நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தனது காரை நிறுத்தி, டிரைவரை அனுப்பி எங்களை கண்டித்தார். மரங்களை பாதுகாக்கவே இதை செய்வதாக கூறியதால் டிரைவர் சாந்தமானார். அதுபோல் மரங்களில் ஆணிகளை அகற்றவும், மேற்கொண்டு மரங்களில் ஆணி அடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், இதுகுறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம்  இரண்டுமுறை மனு அளித்துள்ளோம். 


 

"Love the trees" - Action volunteers to inspire Theni district administration !!

 

முதல் மனு அளித்து 3 மாதங்கள் ஆகிறது. இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை. மனுவின் மீதான பதில் கூட எங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. அதேநேரத்தில் தொடர்ச் சியாக மாவட்டத்தில் உள்ள சாலைகளின் ஓரம் மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது குறிப்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் திட்டச் சாலையிலும் மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சித்துறைக்கு கட்டப்படும் புதிய கட்டிடம் முன்பு இருந்த மரங்களும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு உள்ளது. இந்த மரங்களுக்கு இரவு, பகல் பாராமல் தன்னார்வலர்கள் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தனர். ஆனால், மாவட்ட அதிகாரிகள் துளியும் விழிப்புணர்வு இன்றி அவற்றை வேரோடு பிடுங்கி எறிய காரணமாகி இருக்கிறார்கள் எனவே மக்களை விட மாவட்ட நிர்வாகத்துக்கு தான் மரங்களின் பயன் குறித்த விழிப்புணர்வு தேவைப் படுவதாக கருதுகிறோம். 

எனவே, மாவட்ட நிர்வாகம் மரங்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மரம் நடுவது என்றும், பயணம் செய்யும் போது மரங்களுடன் செல்வது என்றும் திட்டமிட்டுள்ளோம். ஆனால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ செய்வது எங்களின் எண்ணம் இல்லை ஆனால் நிர்வாகத்திற்கு மரங்கள் வளர்த்தல் பற்றிய புத்தியை புகட்ட வேண்டும். எல்லா வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். அதனால் தான் மாவட்ட நிர்வாகத்துக்கு கண்டனம் என்ற பெயரில் மரக்கன்று நடுதல் மரக்கன்றுகளை உறவினர்கள் நண்பர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். இதை பார்த்தாவது மாவட்ட நிர்வாகம் மரங்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று கூறினார்கள்.

 

"Love the trees" - Action volunteers to inspire Theni district administration !!


இந்த தன்னார்வலர்களின் கண்டனம் கூட புதிய முயற்சியாகவே இருக்கிறது. சில இடங்களில் ஆட்சியாளர்கள் புதுமையை புகுத்துவார்கள் ஆனால், தேனி மாவட்டத்தில் தன்னார்வலர்கள் புதுமையை புதுகுத்தி வருகின்றனர்.  அதை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பார்வையாளராக இருந்து கண்டனத்தை சம்பாதிக்காமல் மரங்களை பாதுகாக்கும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தன்னார்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது அதை  மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கவனிப்பாரா? என்பதை பொருந்திருந்து பார்ப்போம்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.