Skip to main content

மனைவிக்கு வாழ்நாள் முழுமைக்கும் தண்டனை தந்த கணவன்!

Published on 09/02/2019 | Edited on 09/02/2019

 

s


திருவண்ணாமலை மாவட்டம், அரசிக்கு புகழ்பெற்ற களம்பூர் அடுத்த நெல்வாய்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது ஏந்துவாம்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு கீதா என்கிற மனைவியும், 2 ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது கிரிஜா, 5 வயதான ஆர்யா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ரமேஷ் சென்னையில் தங்கி கட்டிடங்களில் கம்பி கட்டும் சென்டரிங் வேலை செய்து வந்துள்ளார். மாதத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை சொந்த ஊருக்கு வந்த மனைவி, பிள்ளைகளை பார்த்துவிட்டு செல்வார்.

 

s


ஊரில் உள்ள ரமேஷ் நண்பர்கள் சிலர், உன் மனைவியின் நடத்தை சரியில்லை என புகார் கூறியுள்ளனர். இதனை நம்பி கடந்த 3ந்தேதி ஊருக்கு வந்த ரமேஷ் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். அப்படியெல்லாம் எதுவும்மில்லை எனச்சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதோடு, வேலைக்கு எதுக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன் – மனைவி இருவருக்கும் சண்டை வந்துள்ளது.


நீ யாரையோ வச்சிக்கிட்டு எனக்கு துரோகம் செய்யற என கணவன் – மனைவி இருவருக்கும் பிப்ரவரி 8ந்தேதி விடியற்காலை சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வீட்டை விட்டு வந்தவர் பெரம்பலூர் டூ நகரி இடையே செல்லும் உயர்மின் கோபுரம் அந்த கிராமத்தின் வழியாக செல்கிறது. மின் இணைப்பு தரப்படாத 300 அடி உயரம்முள்ள அந்த கோபுரத்தின் உச்சிக்கு ஏறினார்.

 

s


இதனைப்பார்த்து ஏரிக்கரை ஓரம் இருந்த அவ்வூரை சேர்ந்தவர்கள் எதுக்குடா, ஏர்ற ஏறாதடா எனச்சொல்லியுள்ளனர். அதனையும் மீறி கோபுரத்துக்கு ஏறி, என் மனைவி என்னை மதிக்கல, அதனால் கீழே விழுந்து சாகப்போறேன் என்றுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியானவர்கள் உடனடியாக ரமேஷ் மனைவிக்கு தகவல் கூறினர். அதே நேரத்தில் போலிஸ், வருவாய்த்துறைக்கு தகவல்சொல்ல அவர்களும் சம்பவயிடத்துக்கு வந்தனர்.


அவர்கள் ரமேஷ் வைத்திருந்த செல்போன்க்கு தொடர்பு கொண்டபோது, அவர் எடுத்து பேசியபோது, கள்ளத்தொடர்பு வைத்துள்ள என் மனைவியால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. அதனால் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் என்றார். அவரிடம் செல்போன் வழியாக கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி சிபிசக்கரவர்த்தி, டி.எஸ்.பி செந்தில், மனைவி, பிள்ளைகள் என பலரும் 3 மணி நேரமாக பேசினர்.

 

s


அவரது மனைவியோ ஓவென கதறி அழுதார். தற்கொலை செய்துக்கொள்ள கீழே குதித்தால் பாதுகாப்பாக தாங்கி பிடிக்க வேண்டுமென டவரை சுற்றி வலையை பிரித்தனர். காலை 11.30 மணியளவில் யார் சமாதானத்தையும், நம்பிக்கை வார்த்தைகளை கேட்காமால் டவர் மேலிருந்து கீழே குதித்தார். 200 அடியில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு கம்பியில் தலை மோதியதோடு உடல் சிக்கி அந்தரத்தில் தொங்கியது. மோதிய வேகத்தில் இறந்த ரமேஷ் உடலை ஆரணி தீயணைப்பு துறையினர் மீட்டனர். அவரது உடல் பிரேதபரிசோதனைக்கு பின் ஒப்படைக்கப்பட்டது.

 

s


கள்ளக்காதலில் ஈடுப்பட்ட மனைவிக்கு தண்டனை தர அவர் கத்தி கதறி அழுதும் கேட்காமல் கீழே விழுந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் ரமேஷ். மனைவி, பிள்ளைகள் கண் முன் இந்த கோரம் நடந்துள்ளது. இதனை காலம் முழுக்க அவரது மனைவி மறக்க முடியாது, இது அந்த பிள்ளைகளின் மனதில் ஆழப்பதிந்துவிடும். இது அவர்களை தங்களது தாயை குற்றவாளியாக நோக்கும் பார்வை மரண தண்டனையை விட கொடுமையானதாக இருக்கும் என்பதை காலம் அவருக்கு உணர்த்தும்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.