Skip to main content

காதல் ஒருவருடன் கல்யாணம் ஒருவருடன்;காதலெனும் பெயரில் பணம்பறித்த பெண்ணுக்கு சிறை!!

Published on 18/11/2018 | Edited on 18/11/2018

நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரத்தை சேர்ந்த  உமா என்ற பெண் காதலிப்பதாக கூறி இளைஞரிடம் நகை பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜாமங்கலத்தைச் சேர்ந்தவர் பொறியாளராக இருந்த சோதிரி ராஜா. இவருக்கும் நாகர்கோவிலில் உள்ள கார் விற்பனை நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்த உமா என்ற பெண்ணுக்கும் பணியிடத்தில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.

arrest

 

இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் காதல் மயக்கத்தில் இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். உமா தனது குடும்ப வறுமை நிலையை சோதிரி ராஜாவிடம் சொல்ல ஒரு கட்டத்தில் உமாவைத்தான் தான் மணக்கப் போகிறோம் என்ற மனநிலையில் இருந்த  சோதிரி ராஜா உமாவின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை தன் சம்பளத்தில் இருந்து கொடுத்துள்ளார். 

 

அதேபோல் சிலமாதங்களுக்கு முன்னர் அவருக்கு நான்கு சவரனில்  தங்க வளையல்களையும் பரிசாக அளித்துள்ளார். இப்படி சென்று கொண்டிருந்த இவர்களது உறவில் திடீரென முறிவு ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு மொபைல் எண்ணை மாற்றிவிட்ட உமா  இவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். உமாவின்  அழகில் மயங்கிய சோதிரி ராஜா  அதன்பின்  அவரை  தொடர்பு கொண்டபோது ஜாதி பிரச்சனைகள் இருப்பதால் வீட்டில் நம் காதல் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மறுத்து விட்டனர் எனக் கூறியுள்ளார். 

 

arrest

 

இதுவரை உமாவின் வங்கி கணக்கில் 10 லட்சம் ரூபாய் வரை போட்டிருந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் சோதரி ராஜாவுடன் பேசுவதை முற்றிலும் நிறுத்தியுள்ளார் உமா.

 

பின்னர் சில நாட்கள் கழித்து நெல்லையில் ஒரு ஹோட்டலில் நடந்த திருமண வரவேற்பு விழாவிற்கு சென்றபோது சோதிரி ராஜா தனது காதலி வேறு ஒருவருடன் ஜோடியாக இருப்பதைக் கண்டு மிகவும் வருந்தி கண்கலங்கினார். அதன்பின் உமாவிடம் சென்று தான் கொடுத்த 10 லட்சம் ரூபாய் பணத்தையும், தங்க வளையல்களையும் திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

 

arrest

 

அதற்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் கண்டிப்பாக கொடுத்து விடுகிறேன் என  உமா உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதன்பிறகு செல்போன் நம்பரை மாற்றிய உமா சோதிரி ராஜாவின் அழைப்புகளை எடுக்க மறுத்துள்ளார். மேலும் உமா பரமசிவம் என்ற வேறொரு நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டது சோதிரி ராஜாவுக்கு தெரியவந்தது.

 

இதுபற்றி சோதரி ராஜா  காதல் கணவர் பரமசிவம் என்பவரிடம்  நேரில் சென்று நியாயம் கேட்டுள்ளனர். ஆனால் உமாவின் கணவன் பரமசிவனோ  சோதிரி ராஜாவை மிரட்டியதாக கூறப்படுகிறது.

 

arrest

 

இதையடுத்து வள்ளியூர் காவல் நிலையத்தில் தனது வங்கிக் கணக்கு, நகைக்கடை ரசீது என ஆதாரங்களுடன் முறையாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இந்த வழக்கை விசாரித்த போலீசார்  காதல் என்ற ஒற்றை வார்த்தையில் ஏமாற்றிய உமாவை கைது செய்தனர். அதேபோல் கொலை  மிரட்டல் விட்ட உமாவின் கணவர் பரமசிவத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

   

சார்ந்த செய்திகள்

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.