Skip to main content

காதலியை திருமணம் செய்த காதலன்...கணவன் ஆனதும் ஒரு வாரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

சேலத்தில் காதலியை திருமணம் செய்த காதலன், ஒரு வாரத்தில் காதல் மனைவியை துன்புறுத்தி ஜாதியை பற்றி பேசி மனைவியை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அழகாபுரம் மோளப்பட்டியான்வட்டம்  பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சுரேஷ்குமார்(25). வீடு மற்றும் கடைகளுக்கு டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சூரமங்கலம் சின்னப்பாநகரை சேர்ந்தவர் சோபியா(24). இவர் பி.காம் வரை படித்த பட்டதாரிப் பெண். இந்த நிலையில் சுரேஷ்குமாரும், சோபியாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் சுரேஷ்குமார் வீட்டில் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். சுரேஷ்குமார் வீட்டில் எதிர்ப்பு அதிகமாக இருந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 12ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். 

 

family issues



பின்பு இருவரும் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சோபியா, நேற்று முன்தினம் திடீரென சேலம் சூரமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேசனில் கணவர் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரில் எங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சுரேஷ்குமாரும், நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். பிறகு தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தோம், இந்த நிலையில் திடீரென எனது கணவரான சுரேஷ்குமார், என் ஜாதி பெயரை சொல்லி என்னை அசிங்கப்படுத்தி வீட்டைவிட்டு வெளியே துரத்திவிட்டார். எனவே, சுரேஷ்குமார் அவரது பெற்றோர் ஏழுமலை, மகாலட்சுமி மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என கூறியிருந்தார். 


இந்த சம்பவத்திற்கு பிறகு சுரேஷ்குமார் உள்பட அவரது குடும்பத்தினர்  4 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து சுரேஷ்குமாரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருமணமான ஒரே வாரத்தில் காதல் கணவன் ஜாதியை சொல்லி கொடுமைப் படுத்தியதால் மனமுடைந்த சோபியா, கணவர் மீது புகார் கொடுத்து சிறைக்கு அனுப்பியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் ரம்மியில் மூழ்கிய கணவன்; மனைவி எடுத்த பரிதாப முடிவு

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
nn

ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ரம்மி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான கணவனால் மனைவி தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பிரதான சாலை பகுதியில் வசித்து வருபவர் செண்பகராமன். இவருடைய மனைவி கௌசல்யா. கணவன் செண்பகராமன் ரம்மி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வெளியே சென்ற செண்பகராமன் ஆன்லைன் ரம்மி விளையாடிக் கொண்டிருந்த பொழுது மனைவி கைது கௌசல்யா கால் செய்துள்ளார்.

ஆனால் செண்பகராமன் அவருடைய விளையாட்டில் பிஸியாக இருந்தால் அழைப்பை எடுக்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த செண்பகராமனிடம் கௌசல்யா செல்போன் அழைப்பை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் வீட்டை விட்டு செண்பகராமன் வெளியே சென்ற நிலையில், கௌசல்யா மனமுடைந்து தூக்கிட்டு வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக கணவன் செண்பகராமனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘அன்பே... பேரன்பே...’ - காதலரைக் கரம் பிடித்த ரகுல் ப்ரீத் சிங்

Published on 22/02/2024 | Edited on 22/02/2024

தடையறத் தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். கடைசியாக அயலான் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தமிழைத் தாண்டி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வந்த இவர், இந்தி தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜாக்கி பாக்னானி என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரின் காதலுக்கும் அவர்களது வீட்டில் சம்மதம் தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணம் காலையில் சீக்கிய முறைப்படியும் மாலையில் இந்து முறைப்படியும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்வில் இருவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அக்‌ஷய் குமார், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட சில பாலிவுட் திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.