Skip to main content

உனக்கு கவுசல்யா வேணுமா... நீ என்ன ஆளு அவள் என்ன... சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பரபரப்பு சம்பவம்!

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

வேறு சமூகத்து பெண்ணை திருமணம் செய்த இளைஞரை கொலை செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் காரப்பாக்கம் என்னும் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். முரளியும், கவுசல்யாவும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர். இதில் முரளி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் கவுசல்யாவின் உறவினர்கள் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

incident



இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு முரளியும், கவுசல்யாவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தை கவுசல்யா உறவினர்கள் கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமில்லாமல் கோபமும் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக இரு வீட்டார் இடையே பிரச்சனை ஏற்படவே சோளிங்கநல்லூர் காவல் நிலையத்தில் வைத்து பேசித் தீர்வு காணப்பட்டது. இதற்கிடையே அண்மையில் கவுசல்யாவின் பெற்றோர் மனம் மாறி முரளியை ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலையில் அவர்களுடைய வீட்டிற்கு அருகேயுள்ள தேனீர் கடையில் முரளி தேனீர் அருந்தி கொண்டிருந்தார். அப்போது அரிவாளுடன் வந்த மர்மக் கும்பல் உனக்கு அவள கேட்குதா...என்று கூறி முரளியை வெட்டி கொலை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. பின்பு அங்கு அருகில் இருந்தவர்கள் சத்தம் போடுவதை பார்த்து பயந்து போன அந்த கும்பல் அங்கு இருந்து ஓடி விட்டனர். அரிவாளால் வெட்டப்பட்ட முரளி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். 


பின்பு தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே முரளி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கவுசல்யாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக, தன்னுடன் பணிபுரிந்த ஒரு பெண்ணை முரளி காதலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணமாகி விடவே, கவுசல்யாவை முரளி திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு முன்னாள் காதலியுடன் முரளி தகாத உறவு வைத்திருந்ததாகவும், இதை அறிந்த அப்பெண்ணின் கணவர் கண்டித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனால் வேறு சமூகத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளாரா இல்லை வேறு ஏதும் காரணம் இருக்கிறதா இல்ல அப்பெண்ணின் கணவர் முரளியைக் கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது காரப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருமணம் ஆன சில மாதங்களில் கொலை செய்யப்பட்டதால் முரளியின் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.    

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.