Skip to main content

தமிழில் 'அன்பு' தான் மூலதனம்... - கனடா பேராசிரியை பெருமிதம்!

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

"தமிழும், தமிழர்களும் மனித குலம் உருவானதிலிருந்தே மூத்த குடிமக்களாக விளங்குகறார்கள். குறிப்பாக தமிழகத்தில் பண்பாடும், கலாச்சாரமும் உலகையே வியக்க வைக்கிறது" என தமிழ் சமூகத்தை பரந்த மனதுடன் பாராட்டுகிறார் கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு பல்கலை கழக பேராசிரியை,

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொங்குநாடு பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைைம தாங்கினார்.


 

 'Love' is the capital of Tamil ... - Canada Professor proud

 

கருத்தரங்கில் கனடாவில் உள்ள டோராண்டோ பல்கலைக்கழக பேராசிரியை பிரேந்தா ஈ.எப்.பெக் என்பவர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தமிழின் பெருமிதத்தைப் பற்றி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

“ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்தை அறிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். இதற்கு எனது பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். அவர்கள் ஒரு காரையே வீடுபோல மாற்றி எனக்கு தந்தனர். அதில் பலஇடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தேன். அப்படித்தான் தமிழகத்திற்கும் வந்தேன். நான் எத்தனையோ நாடுகளுக்கு சுற்றியுள்ளேன் ஆனால் தமிழ்நாடு மனிதகுலத்திற்கே மூத்ததாக விளங்குவதை கண்டு வியந்து போனேன். 

ஒருமுறை கன்னியாகுமரிக்கு வந்தேன். அப்போது இந்திய நாட்டின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் எனக்கு வந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். இப்போது கொங்குநாட்டின் பாரம்பரியம், கலாசாரம், வீரம், வரலாற்று கதைகள் குறித்து ஆராய்ச்சி செய்தேன் எல்லாமே கடந்து விட்ட வரலாறுகளைப் பேசுகிறது. ஆனால் இது எக்காலத்திலும் அழியாது. 

 

 'Love' is the capital of Tamil ... - Canada Professor proud

 

வெளிநாட்டிலிருந்து வந்த நான் உங்கள் பெருமிதத்தை இங்கு உணர்கிறேன். நீங்கள் எல்லோரும் தமிழ் மொழியின் சிறப்பை உயர்த்திப் பிடிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் பல வகையான உபசரிப்புகள், வீரம், காதல் இருக்கிறது. இங்கு எல்லாவற்றிற்கும் அன்பே மூலதனமாக உள்ளது"என்றார்.

இதில் பேராசிரியைகள், மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். நம் மொழியின் பெருமையை இனத்தின் சிறப்பை வெளிநாட்டவர்கள் எடுத்து கூறுவது போல் சிறப்பு வேறு என்னவாக இருக்க முடியும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.