Love affair incident in thiruvallur

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவரது மனைவி பார்வதி (36). திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சுரேஷ், திருவள்ளூர் மார்க்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றார்.

இதற்கிடையில் அதே புல்லரம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 3 மகன்களுக்கு தாயான அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் சுரேஷ் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், சுரேஷ் தான் வேலை பார்த்து வரும் அதே காய்கறி மார்க்கெட்டில் அமுதாவுக்கு ஒரு கடையை வாடகை எடுத்து காய்கறி வியாபாரம் செய்ய வைத்துள்ளார். இந்த விவகாரம் சுரேஷின் மனைவி பார்வதிக்கு தெரியவர, 6 மாதங்களுக்கு முன்பு அமுதாவை காற்கறி கடைக்கு வரக்கூடாது என்று தகராறு செய்து அவரை அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், 6 மாதங்கள் கழித்து அமுதாவை மீண்டும் காய்கறி கடைக்கு சுரேஷ் அழைந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பார்வதி, அமுதாவை பெட்ரோல் ஊற்றி கொல்ல திட்டம் தீட்டி தனது தந்தை பூச்சியுடன் மார்க்கெட்டுக்கு கேனில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு வந்துள்ளார் .

அங்கு சென்ற பார்வதி, அமுதாவிடம் தகறாறு செய்து கொண்டிருந்த போது பார்வதி தனது தந்தையிடம் இருந்த பெட்ரோல் கேனை வாங்கி அமுதாவின் மீது ஊற்றியுள்ளார். அப்போது கடையில், சாமி படத்திற்கு ஏற்றி வைத்திருந்த விளக்கில் பெட்ரோல் பரவி அமுதாவின் உடலில் மளமளவென தீ பற்றி எரிந்ததால் அவர் துடிதுடித்துள்ளார். உடனடியாக மார்க்கெட்டில் இருந்த மற்ற வியாபாரிகள் உடலில் எரிந்திருந்த தீயை அணைத்து அமுதாவை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகக்கொண்டு சென்றனர். ஆனால் 50% க்கு மேல் தீக்காயம் அவரின் உடலில் இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜேஸ்வரி சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இது குறித்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுரேஷின் மனைவி பார்வதி, அவருடைய தந்தை பூச்சி ஆகியோர் தேடி வந்தனர். இந்த வழக்கில் பார்வதி, சுரேஷ், விஜயா மோகன்,முரளி , நதியா, லட்சுமி, சங்கர் ஆகிய 8 பேரை திருவள்ளுர் டவுன் போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரின் காதலியை, மனைவி பட்ட பகலில் காய்கறி மார்க்கெட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி செய்துள்ள சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.