தமிழகத்தில்எச்.ராஜாவம்பிழுக்காதஆட்களேஇல்லைஎன்றுசொல்லலாம். அந்த அளவுக்குப் பத்திரிக்கையாளர்கள்தொடங்கிதிமுக, காங்கிரஸ், நாம்தமிழர்கட்சி, மே 17 இயக்கம்எனஎல்லாகட்சிகளோடும்மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். மேலும்,காவல்துறை, நீதித்துறை, அறநிலையத்துறைபணியாளர்களையும்அவதூறாகப்பேசிவருகிறார். இருந்தாலும்பா.ஜ.க.தேசிய செயலர் என்பதால், எச்.ராஜாவின் நடவடிக்கைகளைக் கண்டுகொள்ளாத தமிழிசை, தமிழகத்தில்தாமரைமலர்ந்துவிடும்என்கிறபொறாமையில் மற்றவர்கள் பொங்குவதாகப்பேட்டியளித்துவருகிறார்.
கடந்தஜூலை 30-ந்தேதிடெல்லியில்பிரதமர்மோடியை, தமிழ்பத்திரிக்கைஊடகஜாம்பவான்கள்மற்றும் டிவிநிறுவனத்தின்உரிமையாளர்கள்சந்தித்துப்பேசினார்கள். இதற்கு ஏற்பாடுசெய்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும், பொன். ராதாகிருஷ்ணனும் மரியாதைநிமித்தமானசந்திப்புஎன்றுகூறினாலும், பத்திரிக்கைகளில்இந்தச்செய்திவெளியாகவில்லை. மோடியும் இதுகுறித்து தனதுடுவிட்டர்பக்கத்தில்பதிவுசெய்யவில்லை. ஆனாலும், ஒருவாரத்திற்குப்பிறகுசமூகவலைத்தளங்களில்புகைப்படம்வெளியாகிபரபரப்பாகப் பேசப்பட்டது. அதாவது, தேர்தல்நெருங்கிவருவதால், ஊடகங்களின்ஆதரவைப் பெறுவதற்கு அந்தச் சந்திப்புநடந்ததாகச் சொல்லப்பட்டது. உண்மையும் அதுதான்.
சுமார்ஒன்றரைமணிநேரம்நடைபெற்றஇந்தச்சந்திப்பின்போது,“4 ஆண்டுகளில்தமதுஅரசுகொண்டுவந்தநலத்திட்டங்களைமக்களிடம்கொண்டுபோய்ச் சேருங்கள். அதுதொடர்பானவிமர்சனங்களையும்பதிவுசெய்யுங்கள், குறைஇருப்பின்எமதுஅரசாங்கத்தைவிமர்சிக்கவும் தயங்காதீர்கள்” என மோடிசொன்னதாக, அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட நண்பர்ஒருவர்விஷயத்தை ‘லீக்’ செய்தார்.
சந்திப்பு நடந்து ஒன்றரைமாதங்கள்கடந்துவிட்ட நிலையில்,தற்போது தமிழ்தொலைக்காட்சிஊடகங்களைத் தொடர்புகொண்டமத்தியஅரசுத் தரப்பு, பிஜேபிதொடர்பாகதாங்கள்வெளியிட்டசெய்திகளைப் பதிவுசெய்துதங்களுக்குஅனுப்பி வைக்குமாறு அறிவுறுத்திஇருக்கிறது. அதற்குகுறிப்பிட்ட ஒரு ஊடகம்‘இங்கேதான்தமிழிசை, எச்.ராஜா, எஸ்.வி.சேகர், கருப்புமுருகானந்தம்போன்றோர் மக்களிடம் ரொம்பநல்லபெயர்(?) வாங்கிவச்சிருக்காங்களே!இதுலநாங்க எங்கே பிஜேபிக்குஆதரவானசெய்திகள்வெளியிட்டிருக்க முடியும்? வேண்டுமானால், மோடிபிறந்தநாளில் 68 பேருக்குமூக்குக்கண்ணாடிகொடுத்தாங்க. அந்தநிகழ்ச்சியில்மோடியின்சகோதரர்பிரகலாத்தாமோதரதாஸ்மோடிகலந்துகொண்டார். இது மட்டும்தான் உருப்படியாகநடந்திருக்கிறது‘ என்று, அந்தநிகழ்ச்சியின்தொகுப்பைஅனுப்பிவைத்திருக்கிறது ஒருசெய்திச்சேனல்.
‘தாமரை மலர்ந்தே தீரும்!’ என்ற தமிழிசையின் பேச்சை, தமிழகத்தில் பலரும்காமெடியாகப் பார்த்து அலுத்துப்போன விஷயம், மோடி வகையறாக்களுக்கு இன்னும்தெரியாது போலும்!