Skip to main content

பாராளுமன்றதேர்தல் வருவதற்கு முன்பே சுவர்களில் தாமரை சின்னம்! போலீஸ்சில் சிபிஎம் புகார்!!

Published on 07/12/2018 | Edited on 07/12/2018

பாராளுமன்ற தேர்தல் வருகிற 2019 நடக்க இருக்கிறது. இந்நிலையில் பிஜேபியை சேர்ந்த கட்சிப் பொறுப்பாளர்கள் சிலர் திண்டுக்கல் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் இப்பொழுதே இடங்களை பிடித்து சின்னங்களையும் வரைந்து வருகிறார்கள்.

 

bjp

 

திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் காளியப்பன் உள்பட சிலர் அங்கங்கே மெகாசைஸ்சில்  பெயர்களை எழுதியும் தாமரை சின்னத்தையும் வரைந்துள்ளனர் அதைக்கண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்கள். அந்த புகாரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் கூறியிருப்பதாவது...

 

 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான  அறிவிப்பு வெளியாகாத நிலையில் பாஜகவினர் சட்டவிரோதமாகவும் மக்களை குழப்பும் வகையில் அக்கட்சியின் தேர்தல் சின்னமான தாமரைச் சின்னத்தை திண்டுக்கல் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிட சுவர்களிலும், ரோட்டுபாலங்களிலும், வீட்டு சுவர்களிலும் அனுமதி பெறாமல் தாமரை சின்னங்களை வரைந்துள்ளனர்.

 

இதற்குக் காரணமான பிஜேபியின் மாநில செயலாளர் தமிழிசை சௌந்தர்ராஜன், தேசிய செயலாளர் எச் ராஜா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் போஸ் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும்    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அஜாய்கோஸ்  லெனின் மற்றும் நிருபன்பாஸ் உள்ளிட்டோர்  திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்தில்  புகார் மனு கொடுத்துள்ளனர்.  இச்சம்பவம் திண்டுக்கல்லில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.