Skip to main content

“திஸ் லவ் ஸ்டோரி என்ட் டுடே” - ஒரே குடும்பத்தில் நேர்ந்த அடுத்தடுத்த துயரம் 

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

Lost their lives continuously  in the same family in krishnagiri

 

கிருஷ்ணகிரி மாவட்டம், குண்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜலபதி (30). இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்குவாரியில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது இவருக்கு, கன்னியாகுமரி மாவட்டம் கீழ்காட்டுவிளை கிராமத்தைச் சேர்ந்த சாம் ராபின்சன் என்பவரின் மகள் அபிசால்மியா என்கிற பொறியியல் பட்டதாரி பெண்ணுடன் முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

 

இதைப் பற்றி தனது பெற்றோரிடம் அபிசால்மியா கூறியுள்ளார். ஆனால், அவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய அபிசால்மியா தனது காதலர் ஜலபதியை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த நாளடைவில், இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் குழந்தைக்கு பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அந்த பெண் குழந்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பரிதாபமாக இறந்தது. 

 

இக்குழந்தை இறந்ததால் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்ட அபிசால்மியா கடந்த 6 ஆம் தேதி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தான் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தையும் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், “என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. முழுக்க முழுக்க நான் தான் காரணம். என் பாப்பாவ பார்க்கணும் போல இருக்கு” என்று எழுதியிருந்தார். அது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. 

 

இந்த நிலையில், தனது குழந்தையும், மனைவியும் உயிரிழந்ததால் ஜலபதி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக நேற்று முன்தினம் (11-10-23) ஜலபதியும் தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஜலபதி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக 4 பக்கத்தில் எழுதிய உருக்கமான ஒரு கடிதத்தைக் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், “என்னால் என் மனைவி அபியையும், எனது குழந்தையையும் பிரிந்து வாழ முடியவில்லை. அவர்கள் இல்லாத உலகில் எனக்கு மட்டும் என்ன வேலை? அதனால் தான் இந்த முடிவு. திஸ் லவ் ஸ்டோரி என்ட் டுடே” என்று குறிப்பிட்டிருந்தது. ஒரே குடும்பத்தில் குழந்தை, தாய், தந்தை என அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு; போலீசார் விசாரணை

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
In broad daylight, someone poured petrol and set it on fire; Police investigation

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார். அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர் பிரச்சனையாக இருந்து வந்த நிலையில் இருதரப்பினரும் காவேரிப்பட்டினம் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்தப்பா சின்னவன் தீவனக்கடை ஒன்றில் இருந்த பொழுது கடைக்குச் சென்ற செந்தில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி பற்ற வைத்தார்.

இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த சின்னவனை அங்கிருந்தவர்கள் நேற்று தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பட்டப்பகலில் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Rage for daughter refusing to give up love and incident happened in krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு காமாட்சி (33) என்ற மனைவியும், ஸ்பூர்த்தி எனும் 16 வயதில் மகளும் இருந்தார்கள். ஸ்பூர்த்தி, பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டை வெளியே சென்று ஸ்பூர்த்தி, இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதில், பதற்றமடைந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் ஸ்பூர்த்தி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (16-03-24) இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், ஏரியில் பிணமாக கிடந்தது ஸ்பூர்த்தி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், ஸ்பூர்த்தியும், பாகலூர் அருகே முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (25) என்ற இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரத்தை அறிந்த ஸ்பூர்த்தியின் பெற்றோர், அவரது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், ஸ்பூர்த்தி தனது காதலை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரமடைந்த ஸ்பூர்த்தியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி ஆகியோர், மாணவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும், மாணவியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று அந்த பகுதியில் ஏரியில் வீசியுள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து, பிரகாஷ், காமாட்சி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஸ்பூர்த்தியின் பெரியம்மா மீனாட்சி (36) ஆகிய 3 பேரையில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலை கைவிடாததால், பெற்றோரே மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.