Skip to main content

"எம்-சாண்ட் குவாரிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்" - லாரி உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

lorry owners association request to stop the m sand quarry

 

மணல் குவாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி அதிக அளவில் மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

 

இது குறித்து தமிழ்நாடு மணல் மற்றும் எம்-சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளனம் மாநில இணைச் செயலாளரும், திருச்சி மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவருமான வரகனேரி ஆர்.கோபாலகிருஷ்ணன், நாமக்கல் ஒருங்கிணைந்த லாரி உரிமையாளர்கள் சங்க தலைவரும் தமிழ்நாடு மணல் மற்றும் எம்-சாண்ட் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நல சம்மேளனம் மாநில துணைத் தலைவருமான வழக்கறிஞர் பி.கைலாசம் ஆகியோர் பேசுகையில், "6 சக்கர மணல் லாரிகளுக்கு 8 பக்கெட் மணல் 7,500 ரூபாய் விலையில் வழங்க வேண்டும். 10 சக்கர வாகனங்களுக்கு 13 பக்கெட் மணல் 14,000 ரூபாய்க்கு அரசு வழங்க வேண்டும். மேலும், அதிகப்படியான குவாரிகளை திறக்க வேண்டும். அவ்வாறு மணல் எங்கள் லாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டால் இன்னும் குறைவான விலையில் மக்களுக்கு மணல் விநியோகம் செய்ய முடியும். இதை உடனடியாக அரசும் மணல் குவாரி உரிமையாளர்களும் அமல்படுத்த வேண்டும். ஓவர்லோடு ஏற்றுவதை மணல் லாரி சம்மேளனமும், திருச்சி மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கமும் நிச்சயம் அனுமதிக்காது.

 

சேலம், கரூர், திருச்சியில் தரமில்லாத எம்-சாண்ட் தயாரித்து அதில் பவுடர் கலப்படம் செய்கிறார்கள். இவ்வாறு கலப்படம் செய்து விற்பனை செய்வதால் மவுலிவாக்கத்தில் ஏற்பட்டது போல் கட்டிடம் இடிந்து விழக்கூடிய அபாயம் உள்ளது. ஆற்றில் அதிகப்படியான மணல் இருப்பதால் கர்நாடகாவை போல் தமிழகத்திலும் எம்-சாண்ட் குவாரிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த எம்-சாண்ட் குவாரிகளால் நிறைய மலைகள் காணாமல் போகிறது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள் ஊருக்குள் வருகின்றன. அதிகப்படியான பாறைகளை உடைப்பதால் தமிழகத்தில் பூகம்பம் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது" என்று தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி; சாம்பியன் பட்டத்தை வென்ற திருச்சி அணி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Trichy won the champion title for District Level Shooting Competition

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் திருச்சி ரைபிள் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. 

திருச்சி மாநகர காவல்துறை கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் மாநகர ரைபில் கிளப் 31.12.2021 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் செயல்பட்டு வரும் இந்த கிளப் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந. காமினி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் மாவட்ட அளவிலான ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 27ல் தொடங்கி 28 வரை இருநாள்கள் நடைபெற்றன.

இதில் திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற சுமார் 340 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் 10 மீட்டர் சுடுதளத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறுவர்கள், இளையோர் மற்றும் முதியவர்கள் என ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத், யூத், ஜீனியர், சீனியர், மாஸ்டர் மற்றும் சீனியர் மாஸ்டர் என தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி அதிக புள்ளிகளைப் பெற்று திருச்சி ரைபிள் கிளப் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது. 

போட்டியில் பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இரு வெள்ளி பதக்கங்களை வென்றார். மேலும் ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை(28-04-24) பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் மற்றும் திருச்சி ரைபிள் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற 76 பேருக்கு தங்க பதக்கமும், 69 பேருக்கு வெள்ளி, 50 நபர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 195 பதக்கங்கள் வழங்கப்பட்டது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜி கார்த்திகேயன் அவற்றை வழங்கி பாராட்டினார்.

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.