Skip to main content

''கடத்தல்காரங்களை கண்டுக்கறதில்லை.... கஞ்சிக்கு பாடுபடும் எங்களை புடிக்கிறாங்க...'' வேதனையில் புலம்பும் லாரி ஓட்டுனர்கள்!!

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் சாய, சலவை ஆலைகள், உணவகங்கள் என பல்வேறு தொழிற்சாலைகளுக்கு  மாவட்டத்தின் வெளியூரிலிருந்து  லாரிகள், டெம்போ  மூலம் விறகுகள் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு  விறகுகளை ஏற்றிக் கொண்டு வரும் லாரிகள் உரிய அனுமதியின்றி வருவதாக ஈரோடு கோட்டாட்சியர் கண்டுபிடித்திருக்கிறார். அவரது உத்தரவின் பேரில் ஈரோடு தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் இன்று அதிகாலை சென்னிமலை ரோடு பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது விறகுகளை ஏற்றிக்கொண்டு வந்த  லாரிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

 

Lorry drivers crying in agony !!

 

லாரிகளை ஓட்டி வந்தவர்களிடம் ஆவணங்களை சரிபார்த்தனர். இதில் 11 லாரிகளில் ஏற்றி வந்த விறகுகளுக்கு  உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே இதுகுறித்து தகவல் கிடைத்ததும் லாரியின் உரிமையாளர்கள் திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அந்த லாரிகள் வரிசையாக நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

"சத்தியமங்கலம் பர்கூர் போன்ற காடுகளில் சந்தன மரம், தேக்கு மரம், ஈட்டி போன்ற விலைமதிப்பற்ற மரங்களை வெட்டி கடத்தல்காரர்கள் கடத்துகிறார்கள். அவர்களுக்கு இதே போலீசார்களும், அதிகாரிகளும் ஆதரவாக இருக்கிறார்கள். நாங்கள் ஏதோ கஞ்சிக்கு பாடுபடும் சாதாரணப்பட்டவர்கள் காட்டுக்குள் விளைந்த முள்வேலி போன்ற மரங்களை அந்த இடத்தின் உரிமையாளர்களிடம் விலைபேசி அவற்றை வெட்டி தொழிற்சாலைகளுக்கு கொண்டு சென்று கொடுத்து அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் என்ன ஆவணம் என்று எங்களுக்கு தெரியவில்லை. இருந்தாலும் நாங்கள் நீண்ட காலமாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இடத்தின் உரிமையாளர்களிடம் விலைபேசி வாங்கியதற்கான பட்டியலை காட்டினால் இது ஆவணம் இல்லை என்கிறார்கள்.

 

Lorry drivers crying in agony !!

 

''கடத்தல்காரர்களுக்கு ஒரு நியாயம் கஞ்சிக்கு பாடுபவர்களுக்கு ஒரு நியாயமா" என வேதனையுடன் புலம்புகின்றனர் பறிமுதல் செய்யப்பட்ட விறகு லாரி ஓட்டுனரகள் மற்றும் உரிமையாளர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.