Skip to main content

சேலம் அருகே லாரி ஓட்டுநர் சரமாரியாக வெட்டி கொலை! காவல்துறை விசாரணை!!

Published on 25/02/2020 | Edited on 26/02/2020

சேலத்தை அடுத்த கோட்டகவுண்டம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் சூர்யா (22). லாரி ஓட்டுநர். திங்கள்கிழமை (பிப். 24) இரவு 9.30 மணியளவில், தனது தம்பி சதீஷிடம் செல்போனில் தொடர்பு கொண்ட சூர்யா, தன்னை சிலர் ரயில்வே தண்டவாளம் அருகே சுற்றிவளைத்து வெட்டிக்கொல்ல பார்க்கிறார்கள் என்று மட்டும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்.


இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ், சூர்யாவை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்தும் அவர் செல்போனை எடுக்கவில்லை. உறவினர்கள், ஊர்மக்கள் எல்லோரும் பாகல்பட்டி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே சூர்யாவைத் தேடிச்சென்றனர். தண்டவாளத்தையொட்டி தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் சூர்யா குற்றுயிரும் குலையுயிருமாகப் போராடிக்கொண்டிருந்தார்.


உடனடியாக அவரை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், செவ்வாய்க்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

lorry driver incident police investigation

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். உள்ளூர் காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்து சூர்யா பயன்படுத்தி வந்த செல்போன், துண்டு ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், தண்டவாளப் பகுதியில் உறைந்து கிடந்த ரத்த மாதிரிகளையும் தடய அறிவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.  காவல்துறையினர் விசாரணையில் சூர்யா கொலைக்கான காரணங்கள் தெரிய வந்தன. 


அண்மையில் நடந்து முடிந்த முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, சூர்யாவின் மாமா சுப்ரமணி கோட்டகவுண்டன்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தரப்பினருடன் முன்விரோதம் இருந்துள்ளது. சுப்ரமணியத்துக்கு ஆதரவாக சூர்யா வேலை செய்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக ஓமலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.