ADVERTISEMENT

நடுசாலையில் தீப்பிடித்து எரிந்த லாரி

04:47 PM May 24, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்செங்கோட்டில் நடு சாலையில் லாரி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து கிரானைட் கல் ஏற்றி வந்த லாரி ஒன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென லாரியின் டயர் வெடித்ததில் டீசல் டேங்க் சேதமடைந்து தீ விபத்து ஏற்பட்டது. நடு சாலையில் லாரியின் பின்புறம் தீப்பற்றியது. உடனடியாக அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இது குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பரபரப்பான சாலை பகுதியில் லாரி ஒன்று பிடித்து எரிந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT