ADVERTISEMENT

லாரி வேன் நேருக்கு நேர் மோதி 6 பேர் உயிரிழப்பு!

03:02 PM Aug 13, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருகே லாரியும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முனியன்தாங்கல் சந்தவாசல் பகுதியில் சாலையில் சென்ற லாரியும் வேனும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த ஒரு குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT