Skip to main content

‘சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு முடங்கிவிட்டது!’- பதவி நீட்டிப்பு வழங்கக்கோரி பொன்.மாணிக்கவேல் மனு!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம், நவம்பர் 30- ம் தேதியுடன் முடிவடைவதால், பணி நீட்டிப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
 

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேல், கடந்த 2018 நவம்பர் 30-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். அவருக்குப் பதிலாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தலைவராக கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டார். இருப்பினும், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை ஓராண்டு காலத்துக்கு நியமித்த சென்னை உயர்நீதிமன்றம், அனைத்து வழக்குகளையும் அவர் விசாரிக்க உத்தரவிட்டது.
 

lord statue case pon manickavel chennai high court hearing


வரும் 30-ம் தேதியுடன் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், பணி நீட்டிப்பு வழங்கக் கோரி பொன். மாணிக்கவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் தன்னைத் தவிர, மீதமுள்ள 70 அதிகாரிகள், 132 கான்ஸ்டபிள்கள் என,  202 பேரும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், தனக்கு எதிராக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவிலுள்ள 66 அதிகாரிகள்தான், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

lord statue case pon manickavel chennai high court hearing



சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள், காவலர்கள் என, 116 பேரை அவர்கள் சார்ந்த துறைக்கு திருப்பிய அனுப்பி விட்டு, தற்போது 85 அதிகாரிகள், 108 காவலர்கள் அடங்கிய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு, 2018 ஆகஸ்ட் முதல் 2019 மே வரை முடங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது விசாரணையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யும், டி.ஜி.பி.யும் தலையிடுவதாகவும், பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும்  குற்றம் சாட்டியுள்ள பொன் மாணிக்கவேல், உயர் நீதிமன்றத்தால் ஒதுக்கப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணையை முடிக்க அனுமதிக்கும் வகையில், தனக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.