Skip to main content

நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

கர்நாடகா மாநிலம், பெங்களுரூ புறநகர் பகுதியான ஈஜீபுரா பகுதியில் உள்ளது கோதண்டராமசுவாமி கோயில். இது தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான கோயில். இந்த கோயில் வளாகத்தில் பிரமாண்டமான முறையில் பெருமாள் சிலையை நிறுவ முடிவு செய்த கோயில் நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியது.

 

'Lord Perumal statue'  will have to pass to Tamil Nadu because of court order


தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் பிரமாண்டமான பாறை எங்குள்ளது என தேடியதில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் அருகே கொரக்கோட்டை கிராமத்தில் இருப்பது தெரியவந்தது. அதன்பின் சிலைக்காக பாறையை வெட்டியெடுக்க தமிழக அரசிடம் முறைப்படி அனுமதி பெற்று அந்த மாலையில் இருந்த ராட்சச பாறையை வெட்டியெடுத்து பெருமாள் சிலையை இரண்டு பாகமாக செய்தது. இந்த சிலையின் மொத்த உயரம் 108 அடி. இந்த பெருமாள் சிலை மட்டும் 64 அடி உயரம், 24 அடி அகலத்தில் செய்தது. அதன்பின் 5 தலை நாகம் சிலை தனியாக ஒருக்கல்லில் செதுக்கப்பட்டது, பீடம் தனியாக அமைக்கப்படுகிறது. 


2018 டிசம்பர் மாதம் 7ந்தேதி கொரக்கோட்டையில் இருந்து 240 டயர்கள் கொண்ட கண்டெய்னர் வண்டியில் பெங்களுரூவை நோக்கி புறப்பட்டது இந்த சிலை. தெள்ளார், திண்டிவனம், செஞ்சி, சேத்பட், அவலூர்பேட்டை, திருவண்ணாமலை, செங்கம் வழியாக சிங்காரப்பேட்டைக்கு சென்றுள்ளது.

 

'Lord Perumal statue'  will have to pass to Tamil Nadu because of court order

 

சிங்காரப்பேட்டையில் இருந்து ஊத்தங்கரை செல்லவுள்ள நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் பொதுநலவழக்கு பொங்கலுக்கு முன்பு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று ஜனவரி 18ந்தேதி, அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணா, ராஜமாணிக்கம் தலைமையிலான அமர்வில் வந்தது. அப்போது, வழக்கு தொடுத்த ரத்தினம் தரப்பிடம் பல கேள்விகளை கேட்டனர். தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள், அவர்கள் சிலையை எடுத்துச்செல்ல அனுமதி கேட்டார்கள், அரசாங்கம் சிலையை எடுத்துச்செல்ல பல கட்டுப்பாடுகள், விதிமுறைகளை கூறி அரசாணை வெளியிட்டுள்ளது என்றார்.


அந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகள் சரியாக பின்பற்றி சிலை எடுத்துச்செல்லப்படுகிறதா என தமிழக அரசு 4 வாரத்தில் நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

 

 
இப்படியொரு உத்தரவு தரப்பட்டுள்ள தகவல் கோயில் நிர்வாகிகளுக்கு தெரிந்ததும், எவ்வளவு வேகமாக சிலையை தனது மாநிலத்துக்கு எடுத்துச்செல்ல முடியும்மோ, அத்தனை வேகத்தில் எடுத்து சென்றுவிட வேண்டும் என கோயில் அறக்கட்டளைதாரர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர். மேலும், சிலையின் மற்றொரு பகுதி, கொரக்கோட்டையில் உள்ளதால், அதற்கு எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.