Skip to main content

குமரியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு!

Published on 09/09/2019 | Edited on 09/09/2019

குமரியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
     

விநாயகர் சதூர்தி விழா கடந்த 2-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபா, சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் அதேபோல் வீடுகளிலும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்யப்பட்ட வித,வித வடிவங்களில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தினமும் காலை மாலை நேரங்களில் பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.


     

vinayagar

 

இந்தநிலையில் குமரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 6,7,8 ஆகிய ழூன்று நாட்கள் கடல் மற்றும் நீர் நிலைகளில் கரைக்க காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக கடல் மற்றும் ஆறுகள் என 11 இடங்களில் சிலைகளை கரைக்க தேர்வு செய்யப்பட்டியிருந்தன. கடந்த இரண்டு நாட்கள் சிவசேனா மற்றும் இந்து மகாசபா சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.
     

இதை தொடர்ந்து நேற்று இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன. இதில் சுசிந்திரம் தாணுமாலையன் கோவில் முன், தோவாளை முருகன் கோவில் அடிவாரம், நாகர்கோவில் நாகராஜா கோவில் திடல், திங்கள் நகர் ராதாகிருஷ்ணன் கோவில் முன், வைகுண்டபுரம் ஸ்ரீ ராமர் கோவில் முன், செருப்பாலூர் முத்தாரம்மன் கோவில் முன், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஊர்வலமாக மேளம் தாளத்துடன் கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் கன்னியாகுமரி, மண்டைக்காடு, சொத்தவிளை, மிடாலம், தேங்காபட்டணம் கடல் மற்றும் திற்பரப்பு, குழித்துறை தாமிரபரணி ஆற்று நீர்நிலைகளிலும் கரைக்கப்பட்டன.
     

vinayagar

 

இதையொட்டி குமரி மாவட்டம் முமுவ தும் மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடியில் இருந்து 5 கம்பெனி பட்டாலியன் உட்பட 800 போலிசாரும் அதேபோல் குமரி மாவட்டத்தில் இருந்து 2ஆயிரம் போலிசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டியிருந்தனர். இதைதொடர்ந்து போக்குவரத்துகளும் அந்த நேரத்தில் பாதிக்கப்பட்டியிருந்தன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.