Skip to main content

உங்கள் குடும்பத்தையும் ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்... கி.வீரமணி உருக்கமான வேண்டுகோள்

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 06.04.2020 திங்கள்கிழமை ‘குடிகெடுக்கும் குடி’: குடி மூழ்கச் செய்கிறதே! என்ன பரிகாரம்! என்றை தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

அதில், "கரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவால் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுவிட்டன.
 

‘குடியும்‘, ‘குடித்தனமுமாக’ காலத்தைக் கழிக்கும் குடிமகன்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குடியால் ஏற்படும் கேடே இதுதான்.

குடிகாரர்கள் தங்களுக்குத் தாங்களே கேடு ஏற்படுத்திக் கொள்வதோடு குடும்பங்களையும் சீரழித்து வருகின்றனர்.
 

மதுபானம் கிடைக்காத இந்தத் தருணத்தில், ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்ற பழமொழிக்கு ஏற்ப கண்டதையும் குடித்து போதைப் பசியைத் தீர்த்துக் கொள்ளத் துடியாய்த் துடிக்கின்றனர்.

 

wwww



வார்னீஷைக் குடிப்பது, ஆஃப்டர் ஷேவிங் லோசனைக் குளிர்பானத்துடன் கலந்து குடிப்பது என்ற முறையில் உயிர்களைப் ப(லி)றிகொடுக்கும் மனிதர்களை நினைத்தால் ‘பகீர்’ என்கிறது - நமக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
 

இந்தப் பிரச்சினையைக் கேரள அரசு எப்படி கையாள்கிறது என்பதைக் கவனிக்கலாம்.
 

மனநல மருத்துவமனைகளை விரிவாக்கலாம். போதை மறுவாழ்வு மய்யங்களின் (De-addiction Centre) மூலம் மதுவுக்கு அடிமையான குடிமக்களை  (Alcohol Dependent Syndrome) கரையேற்ற வேண்டியது இந்தக் காலகட்டத்தில் கட்டாயம்.
 

ஒரு கெடுதலிலும் நல்லது என்பதுபோல, இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டாவது மதுப் பே(போ)தையர்களை மீட்க முடியுமா? அந்தப் போதையை வீழ்த்த முடியுமா? என்ற எதிர்பார்ப்புதான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட வர்களின் நல்லெண்ண எதிர்பார்ப்பாகும்!

 

nakkheeran app

குடிப் பிரியராகி, குடிவெறியர்களான அருமைத் தோழர்களே! உங்கள் குடும்பத்தையும் ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். இதுதான் சரியான சந்தர்ப்பம்! 


மனக் கட்டுப்பாட்டுடன் கடைபிடித்தால் உங்கள் ஆயுளும் நீளும் - உங்கள் குடும்பமும், சமூகமும் மகிழ்ச்சியில் திளைக்கும் - உங்கள் பிள்ளைகளும் பண்பட்ட முறையில் படித்தவர்களாக சமூகம் மதிக்கும் ஒளிவாணர்களாகத் திகழ்வார்கள்.
 

மக்கள் நலனே தன் வாழ்வின் நலனாக 95 ஆம் ஆண்டு வயதிலும் உழைத்த தலைவரின் தொண்டன் என்ற முறையில் சமூக நலக் கண்ணோட்டத்தோடு விடுக்கும் உருக்கமான வேண்டுகோள் இது." இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.