Skip to main content

''எங்கே வந்து நிறுத்தியுள்ளார்கள் பாருங்க.. எடப்பாடி இப்படி தூண்டிவிடலாமா?'' - புகழேந்தி பேட்டி

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

 "Look at where they have come and stopped... Can Edappadi be provoked like this?" - Pugahendi interview

 

தான் இறந்துவிட்டதாக முகநூலில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி இன்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பின் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “அதிமுக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஓபிஎஸ் உடன் இணைந்து நான் செயல்படுவது உங்களுக்கு தெரியும். அவருடைய அணியில் நான் கொள்கை பரப்பு செயலாளராக இருக்கிறேன். அதெல்லாம் உங்களுக்கு தெரியும். ரொம்ப வருடமாக நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்ப செய்தி என்னவென்றால் நம்மை மிரட்டுவது, ஓபிஎஸ்-ஐ பற்றி தப்பு தப்பாக போடுவது, மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வருவது என இருந்தது. கடைசியா எங்கே வந்து முடிந்துள்ளது என்று பாருங்கள்” என தான் இறந்துவிட்டதாக வெளியான போஸ்டரை செய்தியாளர்களிடம் எடுத்துக் காண்பித்தார்.

 

 "Look at where they have come and stopped... Can Edappadi be provoked like this?" - Pugahendi interview

 

தொடர்ந்து பேசிய அவர், ''புகழேந்தி இறந்துவிட்டார் என்று நியூஸ் போடுகிறார்கள். இதை யார் செய்தார்கள் என்று ஓரளவுக்கு தெரிந்துவிட்டது. ஆகவே டிஜிபி சாரிடம் டிஸ்கஸ் பண்ணி புகார் கொடுத்திருக்கிறேன். எந்த முகநூல் கணக்கில் இருந்து இது வந்தது என்பதை எடுத்து கொடுத்திருக்கிறோம். நாம் இறந்தால்தான் லைஃப் என்று நினைக்கிறார்களா? பழனிசாமி இதைப் போன்ற வேலைகளை எல்லாம் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் அளவிற்கு இறங்கிட்டாரே என்று வருத்தமாக இருக்கிறது. எடப்பாடி எனக்கு பழைய நண்பர். நண்பர் ஒருவர் என் வீட்டுக்கு அருகில் இருந்து 'ஓ' என்று அழுகிறார். நான் வீட்டுக்குள்ளே இருக்கிறேன். ஏன் அழுகிறார் என்று பார்த்தால் கடைசியில் அவர்தான் இதை என்னிடம் காண்பித்தார். ஆதாரத்தோடு புகார் அளித்துள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.