Skip to main content

''தங்களுக்கு ஒரு பெரியார் இல்லையே என்ற ஏக்கம் மற்ற மாநிலங்களுக்கு வந்துவிட்டது''-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 30/07/2023 | Edited on 30/07/2023

 

"The longing of not having a Periyar has come to other states" - Chief Minister M. K. Stalin's speech

 

சென்னை தி.நகரில் நடைபெற்ற எழுத்தாளர் மா.நன்னன் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  ''தந்தை பெரியார்,கலைஞர், நன்னன் ஆகியோர் மொழிக்காக போராடியவர்கள். இறுதி வரைக்கும் உழைத்தவர்கள் இவர்கள். இவர்களால் சும்மா இருக்க முடியாது. இவர்கள் மட்டுமல்ல இவர்கள் பக்கத்தில் இருப்பவர்களையும் சும்மா விட மாட்டார்கள். நன்னன் எழுதிக் கொண்டே இருந்தார். எனக்கென்ன பெருமை என்றால் பல்லாயிரம் பக்கங்களை எழுதி குவித்திருக்கக்கூடிய புலவர் நன்னனின் விரல்களுக்கு விழுப்புரத்தில் நடைபெற்ற இளைஞரணி பாசறை கூட்டத்தில் மோதிரம் அணிவித்தவன் நான். அதை இன்றைக்கும் நினைத்து பெருமையாக கருதிக் கொண்டிருக்கிறேன்.

 

அவரைப் பொறுத்தவரை என்னோடு வாரத்திற்கு இரண்டு முறையாவது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார். அப்படி தொடர்பு கொள்கின்ற போதெல்லாம் உங்கள் அறிக்கையை பார்த்தேன்; உங்க பேச்சை படித்து பார்த்தேன் நன்றாக இருந்தது என்பதோடு அதைத் தாண்டி அறிவுரைகளையும் வழங்குவார். திடீரென ஒரு வாரம் அவரிடத்தில் இருந்து எனக்கு போன் வரவில்லை. நானே நினைத்துக் கொண்டேன் உடல்நிலை சரியில்லை போல இருக்கு எனக் கருதி உடனே அவரை நேரில் பார்த்து விசாரித்தேன். ஆமாம் என்று சொன்னார். அதனால்தான் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சொன்னார். அந்த நேரத்தில் முரசொலி பொங்கல் மலர் வெளியாகி இருக்கிறது. அந்த மலரை கொண்டு போய் கொடுத்தேன். அவர் பெரியார் கணினி புத்தகத்தை எனக்கு கொடுத்தார்.

 

திடீரென 2017 ஆம் ஆண்டு அறிவாலயத்திற்கு வந்தார் .உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்திலேயே வந்தார். அனைவரையும் பார்த்துவிட்டு போக வேண்டும் உற்சாகப்படுத்திவிட்டு போக வேண்டும் என்று தான் நான் வந்தேன் என்று சொல்லிவிட்டு போனார். நவம்பர் மாதம் ஏழாம் நாள் நன்னன் மறைந்தார். மறைந்தார் என்று சொல்ல முடியாது. அவர் மறைந்த பிறகும் புத்தகம் அவர் பெயரால் வெளிவந்து கொண்டிருக்கிறது. வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக, மொழிக்காக பாடுபடுவதும் முக்கியம். சிந்தனையால்; செயலால்; எழுத்தால் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர் புலவர் மா.நன்னன். அவரின் பேச்சு திராவிட இயக்க வகுப்பு நடத்துவது போன்று இருக்கும். திராவிட கொள்கைகளை ஏற்றுக் கொண்ட அனைவரும் கலைஞரின் வெளித்தோன்றல்கள் தான். தங்களுக்கு ஒரு தந்தை பெரியார் இல்லையே, திராவிட இயக்கம் இல்லையே என்ற ஏக்கம் மற்ற மாநிலங்களுக்கு வந்துள்ளது. புலவர் மா.நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்.

 

தினந்தோறும் தவறான பாடங்களை நடத்திக் கொண்டிருக்கிறார் ஆளுநர். ஆளுநர் அவ்வாறு பேசி வருவதை நமது கொள்கைக்கு மிகப்பெரிய விளம்பரத்தை கொடுத்து வருகிறது. சனாதனம், வர்ணாசிரமம் பற்றி ஆளுநர் தினமும் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். ஆளுநர் பேசி வருவதை நமக்கு பிரச்சாரமாக அமைந்து கொண்டிருக்கிறது. ஆளுநர் தொடர்ந்து இவ்வாறு பேசினால் தான் நாம் நமது கொள்கையை வளர்க்க முடியும்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.