Skip to main content

நிறைவேறும் திண்டிவனம் மக்களின் நீண்ட கால கோரிக்கை..! அமைச்சர்கள் நேரில் ஆய்வு! 

Published on 08/11/2021 | Edited on 08/11/2021

 

The long standing demand of the people of Tindivanam to be fulfilled ..! Ministers interviewed in person!

 

கிருஷ்ணகிரி, பெங்களூரு, திருச்சி, சென்னை என முக்கிய நகரங்களுக்குச் செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் தினமும் கடந்த செல்லக்கூடிய பகுதி திண்டிவனம். ஆனால், இங்கு பேருந்து நிலையம் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

 

முன்னதாக ரயில்வே லைனை ஒட்டி, இந்திராகாந்தி பேருந்து நிலையம் ஒன்று சிறிய அளவில் இருந்தது. ஆனால், திண்டிவனத்தை கடப்பதற்குத் தேசிய நெடுஞ்சாலையில்  மேம்பாலம் கட்டப்பட்டது. மேலும், அதன் அருகிலேயே சென்னை - திருச்சி ரயில்வே பாதையும் அமைந்திருக்கிறது. அதனால், பழைய பேருந்து நிலையத்திற்குச் சென்று வர பேருந்து ஓட்டுநர்களும் சிரமப்பட்டனர். அதுமட்டுமின்றி பல விபத்துக்களும் ஏற்பட்டன. மேலும், கடுமையான போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியாகவும் மாறிவிட்டது. 

 

இதையடுத்து, திண்டிவனம் நகரத்திற்கு பெரிய பேருந்து நிலையம் வேண்டுமென்று நகர மக்கள் பல்வேறு ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறார்கள். இதற்காக பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை, பல்வேறு அரசியல் கட்சிகள், பொது நல இயக்கங்கள் நடத்தின. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் அமைக்க இரண்டு இடங்களை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

 

இதில் அரசியல் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. இந்த நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதை நிறைவேற்றும் வகையில் 25 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 6 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. 

 

இதற்காக அமைச்சர்கள் நேரு, பொன்முடி ஆகியோர் 6ஆம் தேதி திண்டிவனம் வந்து புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் நேரு, “திண்டிவனம் பகுதியில் 25 கோடியே 50 லட்சம் செலவில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் வருவாயை கூடுதலாக்க வேண்டும் என்பதற்காக நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் கட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோன்று பாதாள சாக்கடை திட்ட பணிகள், குடிநீர் திட்ட பணிகள், கழிவறை திட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சட்டசபையில் அறிவித்த திட்டங்களை  நிறைவேற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுற்றுலா வந்தவர்களின் கார் பயங்கர விபத்து; 3 பேர் உயிரிழப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tourists' car tragic accident; 3 people lost their lives

விழுப்புரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சென்டர் மீடியத்தில் மோதியதோடு எதிர்ப்புறம் சென்ற கார் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்த சோக நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ் என்பவர் தன்னுடைய நண்பர் கீர்த்தி மற்றும் விஜயகுமார் ஆகியோருடன் புதுச்சேரிக்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். பின்னர் சுற்றுலாவை முடித்துவிட்டு ஆந்திராவிற்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர். கார் புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மொளசூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. காரை விஜயகுமார் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியத்தில் மோதி சென்னையில் இருந்து தைலாபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த காரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் காரை ஓட்டிவந்த விஜயகுமார் பலத்த காயமடைந்தார். மணீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கீர்த்தி திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால்  செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். சென்னையில் இருந்து தைலாபுரம் நோக்கி வந்த காரில் பயணித்த பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் மனைவி ஜெயந்தி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

போர்வெல் சுவிட்சை இயக்கிய போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
A boy lose their live due to electric shock while turning on the borewell switch

திண்டிவனத்தில் போர்வெல் மோட்டார் சுவிட்சை இயக்கிய 10 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டிவனத்தில் கிராமம் ஒன்றில் அரசு சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற தேவேந்திரன் என்ற 10 வயது சிறுவன் அங்குள்ள மோட்டாரின் சுவிட்ச்சை ஆன் செய்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது சிறுவன் தேவேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த அவருடைய தந்தை மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  ஆனால் சிறுவன் தேவேந்திரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சிறுவனின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியது. போர்வெல் சுவிட்ச் ஷாக் அடிப்பதால் மரக் குச்சியை வைத்து பயன்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், பலமுறை இதை மாற்றக் கோரியும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் தற்போது இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.