Skip to main content

இந்தியாவில் ஊழலுக்கு எதிரான "லோக்பால்" அமைப்பு உருவானது!

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

இந்தியாவில் மத்தியில் ஊழலுக்கு எதிரான அமைப்பு "லோக்பால்" ஆகும். மாநிலத்தில் ஊழலுக்கு எதிரான அமைப்பு "லோக் ஆயுக்தா" ஆகும். இந்த இரண்டு அமைப்பையும் உருவாக்க வலியுறுத்தி சுதந்திர போராட்ட வீரர் "அன்னா ஹசாரே" 2014 ஆம் ஆண்டு டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதில் சமூக ஆர்வலர்கள் , அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சியில் அமர்ந்தால் "லோக் பால்" அமைப்பு உருவாக்கப்படும் என அறிவித்தது. இதனை தொடர்ந்து ஆட்சியை பிடித்த பாஜக "லோக் பால்" அமைப்பை உருவாக்க முன்வரவில்லை. இதனால் மீண்டும் தனது உண்ணாவிரதத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில்  அன்னா ஹசாரே தொடங்கினார். 
 

lokpal member

அப்போது அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு "லோக்பால்" அமைப்பு கட்டாயம் உருவாக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து தற்போது "லோக்பால்" அமைப்பின் தலைவராக முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி " பினாகி சந்திர கோஷ்"நியமித்து குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் இந்த நாள் சுதந்திர இந்தியாவில் வரலாற்று சிறப்பு மிக்க நாள் . இந்த நாளை (19/03/2019) "லோக்பால்" தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
 

"லோக்பால்" அமைப்பின் சிறப்பம்சங்கள் .

இந்தியாவில் உள்ள மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  , மத்திய அரசு அதிகாரிகள் , பிரதமர் உட்பட யார் ஊழல் செய்திருந்தாலும் அதற்கான ஆவணத்தை "லோக்பால்" அமைப்பிடம் அளித்து சமந்தப்பட்டவர்கள் மீது புகார் மனு அளிக்கலாம். இந்த அமைப்பு சாதாரண மக்கள் ஆதாரங்களுடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியில் ஆளும் யார் மீதும் ஊழல் இருந்தாலும் இந்த அமைப்பை நாடலாம். 

லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி " பினாகி சந்திர கோஷ் "அவர்களும் 8 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த உறுப்பினர்களில் நான்கு பேர் நீதிபதிகள் ஆவர். இந்த உறுப்பினர்களின் பெயர் பட்டியலை குடியரசுத்தலைவர் மாளிகை தனது செய்தி குறிப்பில் வெளியீட்டுள்ளது.

1. நீதிபதி . திலீப் பி. போசாலே.
2. நீதிபதி . பிரதீப் குமார் மோகன்தி.
3. நீதிபதி . அபிலஷா குமாரி.
4. நீதிபதி . அஜய் குமார் திருப்பதி.
5. திரு. தினேஷ்குமார் ஜெயின்.
6.  திருமதி. அர்ச்சனா ராமசுந்தரம்.
7. திரு. மகேந்தர் சிங் .
8. டாக்டர். இந்திரஜீத் பிரசாத் கௌதம்.

உள்ளிட்டோர் "லோக்பால்" அமைப்பின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக  எனவும் குடியரசு தலைவர் மாளிகை தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. "லோக்பால்" மற்றும் "லோக் ஆயுக்தா" குறித்த கட்டுரை சமீபத்தில் "நக்கீரன்" இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

பி.சந்தோஷ் , சேலம்.

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.