Skip to main content

'வட மாநிலத்தவர்களின் கடைகளுக்கு பூட்டு...' போராட்டம் நடத்தும் தமிழ் தேசியக்கட்சி

Published on 04/01/2020 | Edited on 05/01/2020

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளைகளையும் அடுத்த மாநிலத்தவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவந்து அத்தனை அரசு வேலைகளையும் மொழி தெரியாதவர்களிடம் கொடுத்துவிட்டு தமிழக இளைஞர்களை வேலையில்லா பட்டதாரிகளாக வீதியில் அலையவிட்டிருக்கிறார்கள். அரசு வேலை மட்டுமின்றி தனியார் வேலைகளும் 50 சதவீதத்திற்கு மேல் வட இந்தியர்களுக்கு வழங்கிவிட்டு குறைந்த கூலி நிறைந்த வேலை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் என்றால் தமிழகம் முழுவதும் குண்டூசி முதல் அத்தனை பொருட்களை தெருத் தெருவாக நடந்து சென்று விற்ற வட இந்தியர்கள் கடந்த பல ஆண்டுகளாக நிரந்தரமாக தங்கி பெரிய பெரிக கடைகளை நடத்தி மொத்த வியாபாரமும் இவர்களே செய்கிறார்கள். தமிழர்களின் சிறுவணிகர்கள் கூட சேட்டு கடைகளில் வாங்கி தான் விற்க வேண்டிய நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

 

'Locking north Indian shops' ... Tamil National Party

 

தமிழக வாடிக்கையாளர்களும் சேட்டுகடை பொருளையே வாங்கத் துடிக்கிறார்கள். இப்படி நாளுக்கு நாள் அந்நியர்களின் வருகை அதிகரித்துள்ளதால் தமிழக இளைஞர்கள் தொழிலாளர்கள், சிறு வணிகர்களின் வர்த்தகம் என அத்தனையும் பாதிக்கப்பட்டு வருகிறது.
 

இந்த நிலையில் தான் தமிழ்நேசன் தலைமையிலான தமிழ்ச்தேசியக் கட்சியினர் மார்வாடி கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்தனர்.
 

அதன்படி இன்று காலை புதுக்கோட்டையில் உள்ள 3 சேட்டு கடைகளுக்கு தமிழ்த்தேசியக் கட்சியினர் பூட்டுப் போட்டுவிட்டு அருகில் துண்டறிக்கைகளையும் ஒட்டி வைத்துவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இது தொடக்கம் தான் இன்னும் தமிழகம் முழுவதும் சேட்டு கடைகளுக்கு நிரந்தரமாக பூட்டுப் போடும் வரை ஓயமாட்டோம் என்று சொல்கிறார்கள் தமிழ்த் தேசியக் கட்சியினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.