Skip to main content

மார்வாடி கடைக்கு ஏன் பூட்டு போட்டோம்...? - கைதானவர் வாக்குமூலம்!

Published on 11/03/2020 | Edited on 11/03/2020

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, கொங்கலம்மன் கோவில் வீதி, புது மஜீத் வீதி, இந்திரா நகர் பகுதிகளில் ஏராளமான வட மாநிலத்தவர்கள்  கடை வைத்துள்ளனர் இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த வட  மாநிலத்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது அவர்கள் கடைகளில் யாரோ  சிலர் பூட்டு போட்டு பூட்டி வைத்து இருந்தனர்.

 

locked  north marvadis store by overnight

 



மேலும் அங்கு பிளக்ஸ் பேனர் ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது . அந்த பேனர் மூலம், வடமாநிலத்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வடமாநிலத்தவர் கடைகளுக்கு பூட்டு போட்டதாக தமிழ் தேசிய கட்சியின் முதன்மை செயலாளர் சித்தோடு வீரக்குமார் என்பவரை போலீசார்  கைது செய்தனர். 

இந்த நிலையில் இன்று ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் வட மாநில வியாபாரிகள் சிலர் வந்து தங்கள் கடைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். ஏன் கடைகளுக்கு பூட்டு போட்டீர்கள் என்று போலீஸ் விசாரித்த போது, "இன்று தமிழ்நாடு முழுக்கவே வடமாநில வியாபாரிகள் பல லட்சக்கணக்கான பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் விளைகிற மஞ்சள் உட்பட உற்பத்தியாகிற ஜவுளி என தமிழனின் தொழிலை அவர்கள் தீர்மானிக்கும் அளவுக்கு வந்துவிட்டார்கள். 

அதேபோல் வடமாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் குவிந்துவிட்டனர். ஈரோட்டில் மட்டும் வடமாநில முதலாளிகள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். இங்கு இருக்கும் வளத்தை அவர்கள் தங்களுக்கான வியாபாரமாக மாற்றி செழித்து கொண்டிருக்கிறார்கள். தமிழனுக்கு மிஞ்சியது டாஸ்மார்க் கடை மட்டுமே. மற்ற எல்லா தொழிலையும் அவர்கள் பிடித்துவிட்டார்கள். ஆகவேதான் தமிழகத்திலுள்ள வடமாநில வியாபாரிகளும், வடமாநிலத்தவர்களும் இங்கிருந்து வெளியேற வேண்டும் இல்லையேல் வெளியேற்றப்படுவீர்கள் என்று அவர்களது கடைக்கு அடையாளமாக பூட்டு போடும் போராட்டத்தை நாங்கள் நடத்தினோம். இது ஒரு எச்சரிக்கை தான் எனக்கூறினார் கைது செய்யப்பட்டவர்.

வட மாநிலத்தவர்களின் கையில் தமிழக பொருளாதாரம் போய் விட்டது என்பது உண்மை தான். ஆனால் இதற்கு சரியான முடிவு எடுக்க வேண்டியது ஆளுகிற அரசுகள் தானே...?

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.